It
ராவய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராவய லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 31 அக்டோபர், 2015

மகிந்த - கப்ரால் அநுசரணையில் 40 தொன் தங்கம் களவாக விற்கப்பட்டுள்ளது! -ராவய


முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலின் அனுசரனையோடு மஹிந்த ராஜபக்ஷவின் பங்களிப்புடன் சந்தேகத்துக்குரிய தரகர்கள் சிலர் மூலமாக 40 மெட்ரிக் தொன் தங்கம் இலங்கையில் இருக்கும் ஜப்பான் கம்பனியொன்றாகிய ''ஜபூடா ஹோல்டிங்" ஊடாக ஜப்பனிலுள்ள வரையறுக்கப்பட்ட ''சுஷ்செய் செகியுரிடீஸ்"கம்பனிக்கு விற்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த சாட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

திங்கள், 17 ஆகஸ்ட், 2015

மகிந்தர் இன்னும் இருந்திருந்தால் நாடு கிரேக்கமாயிருக்கும்! - சிரேஷ்ட விரிவுரையாளர் டெரன்ஸ் புரசிங்க

தமிழில் - கலைமகன் பைரூஸ்

ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தெளிவான சிறப்பொன்றுள்ளது. நூறு நாள் திட்டத்தை அடிப்படையாக வைத்தே அது நடைபெற்றது. அதற்கேற்ப ஜனநாயக மறுசீரமைப்பே அதில் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. அதிலும் மேலாக நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழித்தல் என்ற வார்த்தைப் பிரயோகம் முதன்மை இடத்தில் நின்றது. இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் முதன் முறையாக ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொன்னூற்று நான்காம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்கும் போது அவ்வாறு வாக்குறுதியளித்தார். யதார்த்தபூர்வமான ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் எனும் நோக்கத்துடனேயே அவர் அன்று அந்த வாக்குறுதியை அளித்தார். என்றாலும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

ஜனாதிபதி முறைமையில் பல இடர்பாடுகள் இந்நாடு சந்தித்திருந்தாலும், அதில் மிகக் கூடுதலான இடர்பாடுகள் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற கையோடு அதிகரித்தது. பதவிக்கு வந்ததும் நிறைவேற்று அதிகார முறைமையை பயன்படுத்தாதவிடத்தும், அந்த நிறைவேற்று அதிகாரமுறைமையை இல்லாதொழிப்பதாக வாக்குறுதியளித்தே அவர் பதவிக்கு வந்தார். என்றாலும், மெல்ல மெல்ல வாக்குறுதிகள் அவரால் நிராகரிக்கப்பட்டு அவரது போக்கிற்கேற்ப ஜனாதிபதி முறைமையை ஆக்கிக் கொண்டார். ஈற்றில் 18 ஆவது திருத்தச் சட்டம் எனப்படுகின்ற ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரான திருத்தச் சட்டத்தைக் கொண்டுவரக் கூடிய அளவுக்கு அவர் செயற்பட்டார். அதன் மூலம் கடுமையான ஏகாதிபத்திய நிழல் நாடெங்கிலும் புரையோட வழியமைத்தார்.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் நடெங்கிலும் செய்யப்பட்ட கொலைகள் பற்றி மறந்தாலும், யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் தெற்கில் சிங்கள சமூகத்தினிடையே பிரச்சினைகள் முளை கொண்டன. மனித உரிமை மீறப்பட்டது. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டார்கள். காணாமற் போனார்கள். நாட்டை விட்டு வெளியேற்றம் செய்யப்பட்டார்கள். பொதுமக்கள் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு விதத்திலும் கொதித்து எழும்பினார்கள். ரத்துபஸ்வல, ஹலவாத்த, கட்டுநாயக்க போன்ற இடங்களில் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடிய மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். அரசாங்கத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இனவாதக் கும்பல் பேருவளை போன்ற இடங்களில் உயிர்களையும், உடைமைகளையும் அழித்தொழித்தது. அதிகமானோரின் உடைமைகள் இல்லாதொழிக்கப்பட்டதுடன், அவர்களுக்குள் மரண அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட காலப்பிரிவு இதற்கு முன் ஒருபோதும் இருந்ததில்லை. அக்காலப் பிரிவில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளின்பாலான தாகம் நாட்டின் சிறுபான்மையினருக்கு மட்டுமன்றி பெரும்பான்மையினருக்கும் மிகவும் தேவைப்பாடாக மேலெழுந்தது. சென்ற ஜனாதிபதித் தேர்தலின்போது அதுவே வெடித்துச் சிதறியது. நாட்டினுள் இருந்த அந்த ஜனநாயகத்திற்கு எதிரான அனைத்தும் மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியானவுடன் முடிவுக்கு வந்தன.

(தொடரும்)

சனி, 24 ஜனவரி, 2015

மகிந்தவின் இராணுவச் சூழ்ச்சி உண்மையே! -ராவய

னவாரி மாதம் 8 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலின் பெறுபேறு வெளியிடப்பட்டுக் கொண்டிருக்கும்போது மகிந்த ராஜபக்ஷவுக்கு ஆதரவு குறைந்து வருவது தெளிவானால், உடனடியாக நாட்டில் அவசர சட்டத்தை அறிவித்து தேர்தல்கள் ஆணையாளரிடம் வாக்குப் பெறுபேறுகள் வெளியிடுவதை தற்காலிகமாக நிறுத்துமாறு அச்சுறுத்தி, இராணுவத்தினர் நாட்டின் முக்கிய இடங்களை நிருவாகித்து மகிந்த ராஜபக்ஷ இன்னும் இரண்டு ஆண்டுகள் ஜனாதிபதியாக தொடர்ந்து இருப்பதற்கு சூழ்ச்சிசெய்ப்பட்டது உண்மை என்பது தெரியவந்துள்ளது.

ராவயவிற்குத் தெரியவந்துள்ளதற்கு ஏற்ப, இந்த இராணுவ சூழ்ச்சியை கோத்தபாய ராஜபக்ஷவே முன்னெடுத்துள்ளார். அவருடைய தயாரிப்பிற்கேற்ப தேவையான போது, நாட்டின் நிருவாகத்தைக் காவுகொள்வதற்கு ஜனவாரி 8 ஆம் திகதி இரவு நேரம் ஆகும்போது கோத்தபாய ராஜபக்ஷ முன்னர் பணிபுரிந்த கஜபா ரெஜிமேன்துவுக்குச் சொந்தமான இராணுவப் படையில் பத்துப் பிரிவினரை கொழும்பு மற்றும் ஏனைய பகுதிகளில் தயார் நிலையில் வைத்திருந்த்துடன், மோதர ரோக்ஹவுஸ் பாசறையில் இருந்த இராணுவனத்தினருக்குச் சொந்தமான இராணுவ வாகனங்களை வீதியில் ரோந்து செய்வதற்கு தயார்நிலைப் படுத்துமாறும் கட்டளையிட்டுள்ளார்.  அவ்வாறு தயார்நிலையில் வைக்கப்பட்ட இராணுவனத்தினர் மூலம் 8 ஆம் திகதி இரவு தொடக்கம் 72 மணித்தியாலங்கள் பொதுமக்கள்  வெளியே வராத வண்ணம் இராணுவத்தினரும் அதிகாரத்துடன் செயற்பட முடியுமாயின், இச்செயற்பாட்டுக்கு எதிரான மக்கள் சக்தியை இல்லாதொழிக்க முடியும் என சூழ்ச்சியாளர்களின் திட்டமாக இருந்துள்ளது. அத்துடன் பிரதம நீதியசரை அனுப்பி ஜனாதிபதிக்கு இன்னும் இரண்டு ஆண்டுகள் ஆட்சி செய்ய முடியும் என்றவாறு நீதிமன்றத் தீர்மானத்தை எடுப்பதற்கும் ஆயத்த நிலையில் இருந்திருக்கின்றனர்.

இதனை நிறைவேற்றிக் கொள்வதற்காக இரண்டு ஆலோசனைக் கூட்டங்கள் ஜனவாரி மாதம் 7 மற்றும் 8 ஆம் திகதி கொழும்பு பிரபல இராணுவ அலுவலகங்களில் நடைபெற்றிருக்கின்றன. அத்துடன், இச்செயற்பாட்டுடன் தொடர்புடைய இராணுவ அதிகாரிகளும், சிரேஷ்ட பொலிஸ் அதிகாரிகளும் அக்கூட்டத்தில் பங்குகொண்டுள்ளனர்.

மேலதிக செய்திகள் உடன் பதிவேற்றப்படும்.. தொடர்பில் இருங்கள்...

(தமிழில் - கலைமகன் பைரூஸ்)

ஞாயிறு, 11 ஆகஸ்ட், 2013

பொதுபல சேனாவுக்கு நன்றி சொல்கிறார் கண்டி மர்யம் ஷஹீதா


 சாதாரண முஸ்லிம் பெண்ணொருத்தி என்ற வகையில் பிரச்சினைகள் அதிகரித்துவரும் இவ்வாறான ஒரு கட்டுரையை வரைவதற்குரிய மனநிலை ஏற்பட்டது ஒரு விதிசார்ந்த விடயமாகும். 

இவர்கள் புத்த பகவானின் எதிரிகள்! - எஸ்.ஜீ. புஞ்சிஹேவா

(நாளைய ராவய வாரப் பத்திரிகையின் (2013/08/11) ‘மே அய புதுன்கே ஹத்துரோ’ (මේ අය බුදුන්ගේ හතුරෝ - එස්. පී. පුංචිහේවා , සටහන - ටිරන් කුමාර බංගමආරච්චි) எனும் கட்டுரையின் தமிழாக்கம் இது. காலத்தின் தேவை கருதி இது இங்கு பதிவேற்றப்படுகிறது.

தமிழாக்கம்: கலைமகன் பைரூஸ்)