It
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

செவ்வாய், 6 ஜனவரி, 2015

தமிழர்களினதும் முஸ்லிம்களினதும் சூழ்ச்சி நடக்கிறது..!


தமிழ் முஸ்லிம்களைப் போட்டுக் கொடுக்கும் பௌஸி


அடிப்படைவாத தமிழ் மற்றும் முஸ்லிம் அமைப்புக்கள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை தோற்கடிப்பதற்காக ஒன்றிணைந்துள்ளதால், சிங்களவர்கள் ஒன்றிணைந்து ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவை பாதுகாக்க வேண்டும் என மேல் மாகாண சபை உறுப்பினர் நவுஸர் பௌஸி குறிப்பிட்டுள்ளார்.

அடிப்படைவாத இனவாத தமிழ் குழுக்களும் கிழக்கின் அடிப்படைவாத இனவாத முஸ்லிம் குழுக்களும் ஜனாதிபதியைத் தோற்கடிப்பதற்காக களத்தில் இறங்கியுள்ளார்கள். அதனால் நான் இந்நேரம் நாட்டிலுள்ள சிங்கள மக்களிடம் விசேட வேண்டுகோள் ஒன்றை விடுக்கின்றேன். நாட்டைப் பாதுகாக்க, ஜனாதிபதியைப் பாதுகாக் நீங்கள் எல்லோரும் ஒன்றிணைந்து முன்னே வாருங்கள். சிங்களவர்களே உங்கள் ஜனாதிபதியைப் பாதுகாக்க வாருங்கள்...” எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நன்றி - லங்கா சீ நிவ்ஸ்

(கேஎப்)


0 கருத்துகள்:

கருத்துரையிடுக