It
📰 புதிய பதிவுகள்
Loading recent posts...

சனி, 17 ஜனவரி, 2015

மழை! | மஹகம சேக்கர கவிதை


கடும் காற்றுதாவரங்களை வீழ்த்தி
மின்னல் இடிமுழங்கி
மழை மேகமொன்று
திடீரென்று கீழே மழை பொழிந்தது..!

காலத்திற்குக் காலம்
வாழையடி வாழையாய்
உலகத் தொடக்கம் முதல்
இதுவரை இலட்சக் கணக்கிலான
காதலர்களின்
சூடான கண்ணீர் கட்டிகளால்
மழைத்துளி வெளியேறியதாய்
நான் நினைத்தேன்...

-மஹகம சேக்கர
தமிழில் - கலைமகன் பைரூஸ்

16.01.2015




0 கருத்துகள்:

கருத்துரையிடுக