அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவரோ வடக்கு கிழக்குத் தமிழர் ஒருவரோ நியமிக்கப்படவில்லை என்ற விமர்சனம் மிக வலிதானது. அது நிச்சயம் கருத்தில் கொள்ளப்பட்டிருக்க வேண்டும்.
இதை இனமைய அரசியல் (Etno-centric Politics) என்ற தளத்தையும் தாண்டி, விரிந்த பொருளில் நோக்க வேண்டும்.
நேற்று மாலை வரை இதற்கு அவகாசம் இருந்தது. பிரதி அமைச்சர்களது நியமனத்தோடு, இதுவும் நடைபெறக் கூடும் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர், அமைச்சர்களது நியமனம் இன்னும் முழுமை பெறவில்லை என்ற தொனிப்பட கருத்துக் கூறியிருந்தமை, இந்த எதிர்பார்ப்பை