It

Saturday, October 31, 2015

மகிந்த - கப்ரால் அநுசரணையில் 40 தொன் தங்கம் களவாக விற்கப்பட்டுள்ளது! -ராவய


முன்னாள் மத்திய வங்கி ஆளுனர் அஜித் நிவாட் கப்ராலின் அனுசரனையோடு மஹிந்த ராஜபக்ஷவின் பங்களிப்புடன் சந்தேகத்துக்குரிய தரகர்கள் சிலர் மூலமாக 40 மெட்ரிக் தொன் தங்கம் இலங்கையில் இருக்கும் ஜப்பான் கம்பனியொன்றாகிய ''ஜபூடா ஹோல்டிங்" ஊடாக ஜப்பனிலுள்ள வரையறுக்கப்பட்ட ''சுஷ்செய் செகியுரிடீஸ்"கம்பனிக்கு விற்கப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த சாட்சிகள் கிடைக்கப்பெற்றுள்ளன. 

Tuesday, October 27, 2015

சிங்களவர்களை ஆரம்பத்தில் சந்தித்திருந்தால் நான் எல்.ரீ.ரீ.யில் இணைந்திருக்க மாட்டேன் – எனக்கூறிய தமிழினி


இறுதிப் போரில் தப்பி, வாழ்க்கைப் போரில் தோற்ற புலித் தலைவியின் கதை


தமிழினி. அந்தப் பெயர் நாட்டு மக்களின் மனங்களிலிருந்து மறைந்து ஆறு ஆண்டுகளாகி விட்டன. என்றாலும், எல்.ரீ.ரீ.ஈ அமைப்பு முல்லி வாய்க்காலில் மறைந்து போவதற்கு முன்னர், தமிழினியின் பெயர் தெற்கிற்கும் வடக்கிற்கும் நன்கு பரிச்சயமானது. எல்.ரீ.ரீ. அமைப்பின் சக்திமிக்க பெருவிருட்சமாக தமிழினி இருந்தார் என்பதுதான் அதற்குக் காரணம்.

Wednesday, August 19, 2015

சிங்களவர்களுக்கிடையில் பிளவு! அந்நிய மதத்தினர் தங்களுக்கான இருப்பில் உறுதி! – ஞானசார

அபாயம் அருகாமையில் இருக்கும்வேளையில், சிங்களவர்கள் பிளவுபட்டுக் கொண்டிருக்க அந்நிய மதத்தினர் தங்களுக்கான இருப்பை உறுதிப்படுத்தியுள்ளனர் என்பதை இந்த பொதுத் தேர்தல் தெளிவுபடுத்துகின்றது என பொதுஜன பெரமுனவின் தலைவரும், பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளருமான கலகொடஅத்தே

Monday, August 17, 2015

மகிந்தர் இன்னும் இருந்திருந்தால் நாடு கிரேக்கமாயிருக்கும்! - சிரேஷ்ட விரிவுரையாளர் டெரன்ஸ் புரசிங்க

தமிழில் - கலைமகன் பைரூஸ்

ஜனவரி மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் தெளிவான சிறப்பொன்றுள்ளது. நூறு நாள் திட்டத்தை அடிப்படையாக வைத்தே அது நடைபெற்றது. அதற்கேற்ப ஜனநாயக மறுசீரமைப்பே அதில் மிகவும் முக்கியத்துவம் பெற்றது. அதிலும் மேலாக நிறைவேற்று அதிகாரங் கொண்ட ஜனாதிபதி முறையை இல்லாதொழித்தல் என்ற வார்த்தைப் பிரயோகம் முதன்மை இடத்தில் நின்றது. இலங்கை சுதந்திரம் பெற்றதன் பின்னர் முதன் முறையாக ஆயிரத்துத் தொள்ளாயிரத்து தொன்னூற்று நான்காம் ஆண்டு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க ஜனாதிபதியாக பதவியேற்கும் போது அவ்வாறு வாக்குறுதியளித்தார். யதார்த்தபூர்வமான ஜனநாயகத்தைக் கட்டியெழுப்ப வேண்டும் எனும் நோக்கத்துடனேயே அவர் அன்று அந்த வாக்குறுதியை அளித்தார். என்றாலும் அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை.

ஜனாதிபதி முறைமையில் பல இடர்பாடுகள் இந்நாடு சந்தித்திருந்தாலும், அதில் மிகக் கூடுதலான இடர்பாடுகள் மகிந்த ராஜபக்ஷ ஜனாதிபதியாக பதவியேற்ற கையோடு அதிகரித்தது. பதவிக்கு வந்ததும் நிறைவேற்று அதிகார முறைமையை பயன்படுத்தாதவிடத்தும், அந்த நிறைவேற்று அதிகாரமுறைமையை இல்லாதொழிப்பதாக வாக்குறுதியளித்தே அவர் பதவிக்கு வந்தார். என்றாலும், மெல்ல மெல்ல வாக்குறுதிகள் அவரால் நிராகரிக்கப்பட்டு அவரது போக்கிற்கேற்ப ஜனாதிபதி முறைமையை ஆக்கிக் கொண்டார். ஈற்றில் 18 ஆவது திருத்தச் சட்டம் எனப்படுகின்ற ஜனநாயகத்திற்கு முற்றிலும் எதிரான திருத்தச் சட்டத்தைக் கொண்டுவரக் கூடிய அளவுக்கு அவர் செயற்பட்டார். அதன் மூலம் கடுமையான ஏகாதிபத்திய நிழல் நாடெங்கிலும் புரையோட வழியமைத்தார்.

யுத்தம் நடைபெற்ற காலத்தில் நடெங்கிலும் செய்யப்பட்ட கொலைகள் பற்றி மறந்தாலும், யுத்தம் முடிவுக்கு வந்ததன் பின்னர் தெற்கில் சிங்கள சமூகத்தினிடையே பிரச்சினைகள் முளை கொண்டன. மனித உரிமை மீறப்பட்டது. ஊடகவியலாளர்கள் தாக்கப்பட்டார்கள். காணாமற் போனார்கள். நாட்டை விட்டு வெளியேற்றம் செய்யப்பட்டார்கள். பொதுமக்கள் அரசாங்கத்திற்கு எதிராக பல்வேறு விதத்திலும் கொதித்து எழும்பினார்கள். ரத்துபஸ்வல, ஹலவாத்த, கட்டுநாயக்க போன்ற இடங்களில் தங்களுடைய உரிமைகளுக்காகப் போராடிய மக்கள் கொலை செய்யப்பட்டார்கள். அரசாங்கத்தின் மூலம் உருவாக்கப்பட்ட இனவாதக் கும்பல் பேருவளை போன்ற இடங்களில் உயிர்களையும், உடைமைகளையும் அழித்தொழித்தது. அதிகமானோரின் உடைமைகள் இல்லாதொழிக்கப்பட்டதுடன், அவர்களுக்குள் மரண அச்சுறுத்தலையும் ஏற்படுத்தியது. நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியின் அதிகாரங்கள் தவறாகப் பயன்படுத்தப்பட்ட காலப்பிரிவு இதற்கு முன் ஒருபோதும் இருந்ததில்லை. அக்காலப் பிரிவில் ஜனநாயகம் மற்றும் மனித உரிமைகளின்பாலான தாகம் நாட்டின் சிறுபான்மையினருக்கு மட்டுமன்றி பெரும்பான்மையினருக்கும் மிகவும் தேவைப்பாடாக மேலெழுந்தது. சென்ற ஜனாதிபதித் தேர்தலின்போது அதுவே வெடித்துச் சிதறியது. நாட்டினுள் இருந்த அந்த ஜனநாயகத்திற்கு எதிரான அனைத்தும் மைத்திரிபால சிரிசேன ஜனாதிபதியானவுடன் முடிவுக்கு வந்தன.

(தொடரும்)

சிங்களவர்களே விழித்தெழுங்கள்….! தமிழ் கூட்டமைப்பு ஈழம் கேட்கிறது! – கோத்தபாய

“தமிழ் கூட்டமைப்பின் தேர்தல் விஞ்ஞாபனத்தில் வரவுள்ள அரசாங்கத்தில் அவர்களின் எதிர்பார்ப்பு 13 திருத்தச் சட்டத்தின்படி அதிகாரப் பிரிவினையே ஆகும். வடக்கு கிழக்கினை ஒன்றிணைப்பதாகும். எல்.ரீ.ரீயினரின் கொள்கையையே தமிழ் கூட்டமைப்பு முன்னெடுத்துச் செல்கின்றது” என முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஷ குறிப்பிட்டார்.

குளியாப்பிட்டி எம்பவ பிரதேசத்தில் இடம்பெற்ற கூட்டமொன்றின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

தொடர்ந்து அங்கு உரையாற்றிய அவர்,

சிறையில் கைவிலங்குகளுடன் நிற்கின்ற பயங்கரவாத சந்தேகநபர்கள் அனைவரையும் விடுதலை செய்வது தொடர்பிலும் தமிழ் கூட்டமைப்பு தனது தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்டுள்ளது. அத்துடன் யுத்தத்தை முன்னெடுத்த தலைவர்கள், இராணுவ உயரதிகாரிகள், படைத்தளபதிகள் அனைவரையும் ஜெனீவா மனித உரிமைகள் கவுன்சிலின் யுத்த நீதிமன்றின் முன் கொண்டு செல்வதற்கு அரசாங்கம் உதவியாக இருக்க வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளது. இது மிகவும் பயங்கரமான விடயமாகும். 30 ஆண்டு யுத்தத்தின் பின்னர் நாட்டை அபிவிருத்தி செய்வதற்காக எங்களது அரசாங்கம் வெளிநாடுகளிலிருந்து கடன் பெற்று, அதனை சிறப்பாக பல்வேறு தேவைகளுக்குப் பயன்படுத்தியது. நாங்கள் சீனாவிலிருந்தே அதிக கடன் பெற்றோம்.

நல்லாட்சிக்கான அரசாங்கம் சீனாவிலிருந்து கடன் பெற்றுக் கொள்வதை நிறுத்தியுள்ளது. அதனால் இன்று நாட்டின் பொருளாதாரம் கீழிறங்கிச் செல்கின்றது. நெல்லுக்கு சரியான விலை கொடுக்க முடியாதுள்ளது. தென்னை, இறப்பர், பால் உற்பத்திகளுக்கும் இன்று விலை நிர்ணயம் இல்லாதிருக்கின்றது இதனால்தான். 80 களுக்கு மீண்டும் அரசாங்கம் தள்ளப்பட்டுள்ளது. சென்ற புலிப் பிரச்சினைக் காலத்தில் வடக்கில் பொலிஸாரின் வாகனங்கள் தீப்பற்ற வைக்கப்பட்டன என்பதை நாம் அறிவோம். நீதிமன்றங்கள் தகர்க்கப்பட்டன. வீதிகளை மறித்து ரயர்கள் பற்றவைக்கப்பட்டன. விடுதலைப் புலிகளின் கொடிகள் உயர்த்தப்பட்டன. எதிர்ப்புச் சுவரொட்டிகள் எங்கும் ஒட்டப்பட்டன. 80 களில் வடக்கில் இருந்தவற்றின் இலட்சணங்கள் மீண்டும் காணக் கிடைக்கவுள்ளது மிகவும் பயங்கரமான நிலைமையேயாகும்.

-ரிவிர

தமிழில் – கலைமகன் பைரூஸ்


Friday, August 14, 2015

வஸீம் தாஜுத்தீன் மரணம்! வெளிவராத உண்மைகள்!!

“ரக்பி” விளையாட்டின் அசத்தல் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுத்தீன் மரணம் தொடர்பில் இன்று ஊடகங்கள் எங்கும் செய்திகள்... பல சிங்கள இணையத்தளங்களில் பலவாறு செய்திகள் பதிவேற்றப்பட்டு வருகின்றன... அவற்றில் பல அச்சூடகங்களில் வெளிவர வாய்ப்பில்லை... பதிவேற்றப்படும் செய்திகள் தமிழ் பேசும் பலரிடத்தும் போய்ச் சேர்வதுமில்லை...

மின்னியல் ஊடகங்களில் பதிவேற்றப்படும் செய்திகளுக்கு அவ்வவ் இணையத்தளங்களின் வாசகர்கள் எழுதும் பின்னூட்டங்கள் தெரியவருவதுமில்லை...

எனவே, தாஜுத்தீன் தொடர்பான சகல தகவல்களையும் “பரிவர்த்தனம்” வலைத்தளத்தில் அவ்வப்போது பதிவேற்றவிழைகின்றேன்...

“பரிவர்த்தனம்” வாசகர்களும் தங்கள் கருத்துக்களைப் பின்னூட்டமிடலாம்....

“பரிவர்த்தனம்” வலைப்பூவுடன் இணைந்து கொள்ளுங்கள்.. அனைவருக்கும் தளம் பற்றி அறியக் கொடுங்கள்..

இனவாத - மதவாத - மிதவாத கருத்துக்களை அறிந்து புரிந்துணர்வோடு நடக்க “பரிவர்த்தனம்” பங்களிப்புச் செய்யும்.

(கலைமகன் பைரூஸ்)

-------------------------------------------------------------------------------------------------------------------------
ரகர் விளையாட்டு வீரர் வஸீம் தாஜுத்தீனின் சடலத்தை வெளியே எடுத்து, ஆய்வுகள் மேற்கொள்ளவுள்ளது தொடர்பில் ஹெல உறுமயவின் செயலாளர் உதய கம்மன்பில கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பொன்றில் பின்வருமாறு குறிப்பிட்டார்.

எங்களுக்கு நினைவிருக்கிறது. சென்ற ஜனாதிபதித் தேர்தலின்போது எதிர்கட்சியின், அப்போதைய எதிர்க்கட்சியின் முக்கிய தலைப்பாக இருந்தது யாதென்றால், திருடன் மகிந்த காலை முதல் இரவு வரை வானொலியில், தொலைக்காட்சியில், செய்திப் பத்திரிகைகளில், குறுஞ்செய்தி. மின்னஞ்சல், முகநூல் வாயிலான மகிந்த திருடன், மகிந்த திருடன் எனும் மந்திரத்தையே ஜபித்துக் கொண்டிருக்கும்போது பொதுமக்களும் அவ்வாறு இருக்கலாம் என நினைத்து, திருடர்களைப் பிடிப்பதற்காக வாக்களித்தனர்.


திருடர்களைக் கைது செய்வதற்கு எங்களிடம் எட்டு மாதங்களும் நூறு நாட்களும் கேட்டனர். நூறு நாட்களுக்குப் பதிலாக எட்டு மாதங்கள் போய்விட்ட நிலையிலும் சொன்ன “மெகா டீல்” சரியாகவில்லை. எதனையும் வெளிச்சத்திற்குக் கொண்டுவர முடியவில்லை. எது எவ்வாறாயினும் திருடர்களைப் பிடிப்பதற்காகச் சென்றவர்கள் மகா திருடர்கள் ஆகிவிட்டார்கள். அதனால் எல்லோரும் இன்றும் திருடன் திருடன் என்கிறார்கள். ஆட்சி பீடமேறியுள்ள ஒரு சிலர் திருடன் திருடன் என்று கூறி போதும் போதும் என்ற நிலைக்குள்ளாகியுள்ளனர். 


தாஜுதீனின் மரணம்

இதோ புதியதோர் சுலேகாம் ஏந்தியிருக்கிறார்கள்… “ராஜபகஷ குடும்பத்தினர் கொலைகாரர்கள்”. எனவே, அதனை உறுதிப்படுத்துவதற்காக நேற்று (11) காலம்சென்ற வஸீம் தாஜுத்தீன் எனும் ரகர் விளையாட்டு வீரரின் பிரேதம் வெளியே எடுக்கப்பட்டது. தாஜுத்தீனின் சகோதரன் தனது முகநூல் பக்கத்தில் பின்வருமாறு குறிப்பிட்டிருக்கிறார். “எனது தம்பியின் கொலை தொடர்பில் குடும்பத்திலுள்ள எங்களுக்கு எவ்வித சந்தேகமும் கிடையாது. எனது தம்பியை அரசியலுக்குள் எடுத்துச் செல்ல வேண்டாம். எங்களுக்கு எங்கள் பாட்டில் நிம்மதியாக இருக்கவிடுங்கள்”


இந்த குடும்ப உறுப்பினர்களுக்கு இல்லாத வருத்தம் வஸீம் தாஜுத்தீன் விடயத்தில் இவர்களுக்கு ஏன்? 

(Pls Wait......................)

Wednesday, August 5, 2015

புனித குர்ஆன் மீது அபாண்டமான குற்றம் சாட்டு!

தமிழர்களும் முஸ்லிம்களும் சிங்களவர்களை நசுக்கின்றனர் என சிங்களவர்களை மூளைச்சலவை செய்வதில் தீவிரம் காட்டும் சுசந்த ரணதுங்க!

சிங்கள மக்கள் தமிழ் - முஸ்லிம்களுக்கு எதிராகச் செயற்படுவதற்காக அநுராதபுரத்திலிருந்து பொதுபல சேனாவின் அரசியல் கட்சியான பொதுஜன பெரமுணவிலிருந்து போட்டியிடுகின்ற சுசந்த ரணதுங்க சிங்களவர்களை மூளைச் சலவை செய்துவருகின்றார். அவரது பேட்டி சிங்களவர்களுக்கு மத்தியில் வெகுவேகமாக சமூக வலைத்தளங்களின் மூலம் சென்றுகொண்டிருக்கின்றது.

“பரிவர்த்தனம்” வாசகர்கள் அவரது நச்சுக்கருத்துக்கள் அடங்கிய சிங்கள பேச்சின் தமிழ்பெயர்ப்பை இங்கே முழுமையாகப் படிக்கலாம். தமிழ் - முஸ்லிம்கள் அதிகமதிகம் இந்தச் செய்தியின் மூலம் விளிப்படையச் செய்ய தங்களால் ஆன பங்களிப்பைச் செய்யவும்... பகிரவும்.. அவதானமாக இருக்கவும்.

அவரது நச்சுக்கருத்துக்களின் பெயர்ப்பு -

அன்புக்குரிய சிங்களவர்களே!

இது நாம் விளித்துக் கொள்ள வேண்டிய காலம்! எந்நேரமும் சிந்திக்க வேண்டிய காலம்!

சிங்களவர்களின் சிங்கள தேசம் 1500 வருடங்களுக்கும் மேற்பட்ட வரலாற்றைக் கொண்டது. இந்த சிங்கள நாட்டில் இன்று சிங்களவர்களுக்கு என்ன நடந்திருக்கின்றது? வில்பத்தில் 600 ஏக்கர்களை ரிஷாத் பதியுத்தீன் கைப்பற்றியிருக்கின்றார். அதேவேளை கிழக்கு மாகாணத்தில் ரவூப் ஹக்கீம் அவர்களுக்குத் தனியானதொரு மாகாணம் கேட்கும்போது வடக்கில் விஜயகலா மகேஷ்வரன் ஐக்கிய தேசியக் கட்சி ஆட்சிக்கு வந்ததும் அங்கிருக்கின்ற பொலிஸாரை முழுமையாக அனுப்பிவிடுவதாக உரத்துச் சத்தமிடுகின்றார். பிரபாகரனின் மைத்துனன் சிவாஜிலிங்கம் குருணாகலையில் போட்டியிடவுள்ளார். அநுராதபுர சிங்களவர்கள் மரக்கலயர்களுக்கும் (முஸ்லிம்களுக்கும்) தமிழர்களுக்கும் அகப்பட்ட சிறைக்கைதிகளாக இருக்க வேண்டிய நிலைமையே தற்போது ஏற்பட்டுள்ளது. 2500 ஆண்டுகள் பழைமைவாய்ந்த சிங்கள இனத்திற்கு இன்று இந்நிலையே ஏற்பட்டிருக்கின்றது.

அன்புக்குரிய சிங்கள மக்களே!

சிந்திக்க வேண்டியதொரு காலம் உள்ளது. மிகக் குறுகிய காலம். முஸ்லிம்களின் குர்ஆனில் இருக்கும் விடயம் உங்களுக்குத் தெரியுமா? அந்த குர்ஆனில், ஏதேனும் ஒரு நாட்டில் முஸ்லிம்களின் சனத்தொகை நூற்றுக்கு ஐம்பதைத் தாண்டினால் ஏனைய அனைத்து மக்களும் முஸ்லிம்களாக மாற வேண்டும். முஸ்லிம்களாக மாறாதவர்களை முழுமையாக அழித்தொழிக்க வேண்டும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. இதுதான் அல்லாஹ்வின் ஆணை.

இலங்கையில் கடைசியாக கணிக்கப்பட்ட சனத்தொகைக் கணிப்பீட்டின்படி பௌத்தர்கள் 69.5 வீதம் காணப்பட்டனர். தற்போது மிக மிகக் குறுகிய பதினொரு ஆண்டுகளுள் இந்த சிங்களவர்களின் எண்ணிக்கை 62 வீதத்திற்கும் குறைவாக உள்ளது. மீதியுள்ள நூற்று 7 அல்லது 8 வீதம் முஸ்லிம்களாக மாறுவதற்கு இன்னும் 10 அல்லது 15 எனும் குறுகிய காலம் மட்டுமே.

என் அன்புக்குப் பாத்திரமான பெற்றோர்களே…

ஒரு நிமிடம் சிந்தித்துப் பாருங்கள்.. உங்கள் அன்புக்குரிய மகள் அல்லது சகோதரி “புர்கா” எனும் கறுப்பு ஆடைக்குள் இன்னும் 10 அல்லது 15 ஆண்டுகளுக்குள் புகுந்து கொண்டு முழு உடம்பையும் மறைத்துக் கொண்டு ஒரு மரக்கலயனின் பின் செல்லும் நான்கு பெண்களுள் ஒரு பெண்ணாக இருப்பதற்கு. நீங்கள் இதனை விரும்புகின்றீர்களா? அவ்வாறு விரும்புவதாயின் சிங்களவர்களைக் காட்டிக் கொடுங்கள். 

சிங்களவர்களல்லாத எவனுக்கேனும் உங்கள் வாக்குகளை அளியுங்கள்.
இம்முறை அநுராதபுரத்தில் நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடவுள்ள கட்சி, நிறக் கண்ணாடி எதுவாயினும் எக்கொள்கைகளுடன் இருந்தாலும் சிங்களவர்களை வெற்றிபெறச் செய்ய வேண்டிய காலமே மலர்ந்துள்ளது. எனவே ஒன்றாக – ஒரே சிந்தையுடன் நினைத்துப் பாருங்கள்… 

சிங்களவர்களைத்தான் வெற்றிபெறச் செய்ய வேண்டும். யார் எந்தக் கட்சியிலிருந்து போட்டியிட்டாலும் பரவாயில்லை. சிங்களவர்களுக்காக குரல் கொடுக்கவும். நீங்கள் அவ்வாறு வாக்களிக்க வேண்டிய ஒரே ஒரு சிங்களக் கட்சி எதுவென்றால் அதுதான் பொதுபலசேனாவின் “பொதுஜன பெரமுண” அதுதான் சிங்களவர்களுக்காக குரல் கொடுக்கவுள்ள ஒரே கட்சி. எனவே பொதுஜன பெரமுணவுக்கு உங்கள் உதவிக் கரங்களை நீட்டுங்கள். உங்களுக்காக செத்து மடியவும் நான் தயார். எனவே, அநுராதபுரத்திலிருந்து பொதுஜன பெரமுணவிலிருந்து போட்டியிடும் சுசந்த ரணதுங்க 4 ஆம் இலக்கத்தில் போட்டியிடும் எனக்கு வாக்களிக்குமாறு கேட்டுக் கொள்கிறேன்.

தமிழில் - கலைமகன் பைரூஸ்



Monday, August 3, 2015

கிண்ணஸ் சாதனை… உலகில் வெகுவேகமாக அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் குடும்பம் மகிந்தவின் குடும்பமே….?

August 3, 2015 at 12:01 am | Pariwarthanam

உலகில் மிகவும் வேகமாக அபிவிருத்தியை நோக்கிச் செல்லும் குடும்பமாக இருப்பது மகிந்த ராஜபக்ஷவின் குடும்பமே என பிரதியமைச்சர் ஹர்ஷ த சில்வா குறிப்பிடுகிறார்.

அது தொடர்பில் கிண்ணஸ் சாதனைப் புத்தகம் குறிப்பிடுவதாக கொழும்பில் இடம்பெற்ற கூட்டமொன்றில் அவர் விஷேடமாகத் தெளிவுறுத்தினார்.

எதுஎவ்வாறாயினும் கிண்ணஸ் சாதனைகள் அடங்கிய இணையத்தளத்தில் முழுமையாகத் இவ்வாறான ஒரு குடும்பத்தை தான் உள்ளிட்ட பத்துப் பேர் பலவாறாகத் தேடியும் கண்டு பிடிக்க முடியவில்லை என அவர் அக்கூட்டத்தில் குறிப்பிட்டார்.

“பரிவர்த்தனம்” வாசகர்களாகிய உங்களினாலேனும் கண்டுபிடிக்க முடியுமா? எனத் தேடுங்கள்….

இணையத்தள முகவரி
http://www.guinnessworldrecords.com/

(கேஎப்)



Sunday, August 2, 2015

“இன்னும் இரண்டு ஆண்டுகள் இருக்க நான் பண்டித வேலை செய்துகொண்டேனே!” - மகிந்தர்



-சுனந்த தேசப்பிரிய
தமிழில் - கலைமகன் பைரூஸ்

“நான் இன்னும் இரண்டு ஆண்டுகள் மீதமிருக்கையில் பண்டிதவேலை செய்துகொண்டேனே” என கவலை தோய்ந்த சிரிப்புடன் சொன்னவர் சில ஆண்டுகள் பேரரசராக செல்ஃபி (தன்னைத் தானே எடுத்துக்கொண்ட படம்) அணிந்து இருந்த முன்னாள் ஜனாதிபதி ராஜபக்ஷ.
தற்போது ராஜபக்ஷ தனது அரசியல் வாழ்க்கையில் இரண்டாவது முறையாக பண்டித வேலை செய்திருக்கிறார்.அதாவது கைநழுவிய ஜனாதிபதிப் பதவிக்குப் பதிலாக பிரதமராகவேனும் ஆக வேண்டும் எனும் அபிலாசையுடன் 2015 பொதுத் தேர்தலில் அபேட்சகராக களம் இறங்கியிருக்கின்றார். அவர் வாழ்வின் இறுதிப் பண்டித வேலையாக இது இருக்கும் என்பதுடன் அதன் மூலம் நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் நல்லதே நடந்திருக்கின்றது.
ராஜபக்ஷவை இத்தேர்தலுக்கு அழைத்து வந்தது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி அல்ல. ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வால்மீது ஏறி நாடாளுமன்றத்திற்குள் நுழைந்து கொள்ள எத்தனிக்கும் தோல்வியைச் சந்தித்த எட்டப்பர்களினாலேயே இவர் தேர்தலில் போட்டியிட அழைத்து வரப்பட்டார். அந்த எட்டப்பர்களில் உள்ள வீரவங்ச, தினேஷ், வாசுதேவ, திஸ்ஸ விதாரண, கம்மன்பில ஆகியோரில் எவரினாலும் தனித்துநின்று போட்டியிட்டு பாராளுமன்றத்தில் ஓர் ஆசனத்தைக்கூட வெற்றிகொள்ள முடியாது. ஜனவரி மாதம் 08 ஆம் திகதிக்குப் பின்னர் மைத்திரிபால சிறிசேன ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமைப் பதவிக்குத் தெரிவுசெய்யப்பட்ட பின்னர் தமக்கு போக வர இடமில்லாமற் போகும் என அச்சமுற்ற இந்தக் கும்பல் அவர்களைப் போலவே நாதியற்றுக் கிடந்த ராஜபக்ஷவை மீண்டும்  ஆட்சியில் அமர்த்துவதற்கான திட்டத்தில் இறங்கினர். ஒரு குலைக் காய்களை ஒன்றாகத் தோற்கடிக்க வேண்டும் என்று முடிவெடுப்பதில் பிரதமர் விக்கிரமசிங்கவும், ஜனாதிபதி மைத்திரியும் தோற்றுவிட்டனர். ராஜபக்ஷவின் ஆதரவுடன் ஊழல் குற்றச்சாட்டுக்களுடன் தொடர்புடையவர்கள் சிறையில் அடைக்கப்பட வேண்டியவர்கள் ராஜபக்ஷவின் அடிவருடிகளின் உதவியுடன் அரசியலில் வெற்றிகண்டனர். ராஜபக்ஷவின் இரண்டாவது (மற்றும் கடைசி) பண்டிதக் கதவு அவ்வாறுதான் திறந்து கொண்டது. 
அவர்களின் அனைத்து உபாயங்களையும் உள்வாங்கி, ராஜபக்ஷவாத அடிமைகளிடமிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை மீட்டெடுத்து, அதனை மீண்டும் சமூக ஜனநாயகத்தின்பால் கொண்டுசெல்வதற்கு ஜனாதிபதி சிரிசேனவினால் முடியவில்லை என்பதோடு முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா குமாரதுங்கினாலும் அதில் சரியானதொரு நடவடிக்கை எடுக்கவியலாமல் போயிற்று. கடைசியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் வாலில் தொங்கிக் கொண்டிருந்த கும்பல் அதனது சுக்கானைத் திருப்பி ராஜபக்ஷவை பொதுத் தேர்தலின் பக்கம் சேர்த்துவிட்டனர்.

ஜனாதிபதி சிறிசேன மற்றும் பிரதமர் ரணில் விக்கிமசிங்கவின் வெற்றியை நிர்ணயித்த ஜனவரி மாத வெற்றி பின்தள்ளப்படுவதற்குக் பெரும்பான்மை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி உறுப்பினர்கள் தான் காரணம் என்று சொல்லவியலாது. முன்சொன்ன கும்பலும் ராஜபக்ஷமாரின் தந்திரோபாயமுமே காரணமாகின. ஆகா! அவ்வாறு மகிந்த ராஜபக்ஷ இரண்டாவது பண்டித வேலையைச் செய்வதற்கு காலடி எடுத்து வைத்தார்.



(தொடரும்...)
ජනාධිපති සිරිසේන සහ අගමැති රනිල් වික්‍රමසිංහ විසින් නායකත්වය දෙන ලද ජනවාරි විප්ලවය ආපස්සට හැරවීම බහුතර ශ්‍රී ලංකා නිදහස් පාක්ෂාකයින්ගේ නොව ඉහත කී කල්ලියේ සහ රාජපක්ෂවරුන්ගේ කූටෝපාය විය. අහෝ! එළෙස මහින්ද රාජපක්ෂ දෙවන පණ්ඩිතකම කරා පා නැඟුවේ ය.
පළමු පණ්ඩිතකම කරා රාජපක්ෂ තල්ලු වී ගියේ  ඔහුගේම බල තන්හාවට බොරු කකුල් ඇටවූ රටම රවටන දෛවඥයින් සහ දූෂණයෙන් ඉව වහා ගිය කැසිනෝ සහ එතනෝල් යනාදී හොරු රංචුව නිසා ය. නොපෙනෙන අද්භුත බලවේගයන් කෙරෙහි විශ්වාසය තැබීම අඥානබාවයේ සහ හීන වූ ආත්ම විශ්වාසයේ ලක්ෂණයකි.  පළමු පණ්ඩිතකම මෝඩකමක් යැයි පෙන්වා දීමට රජතුමා හෙළුවෙන් යැයි කීමට ධෛර්‍ය සම්පන්න පුරෝහිතයකු රාජපක්ෂට සිටියේ නැත. අදත් නැත.
රාජපක්ෂගේ දෙවැනි පණ්ඩිතකම නිසා විශාලම පාඩුව සිදු වූයේ ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂයට යි. පෙර කී පරිදිම එය දූෂිත සහ භීෂිත දේශපාලනඥයින්ගෙන් මුදා ගෙන යළි මැදි පිළිවෙතෙහි ගමන් කරන පක්ෂයක් බවට පත් කිරීමට තිබූ අවස්ථාව ඉන් වැළකී ගියේ ය. සමහර විට එක්සත් ජාතික පක්ෂයට සැබෑ තරඟයක් දිය හැකි සමාජ ප්‍රජාතන්ත්‍රවාදී පුළුල් පෙරමුණක් ගොඩ නඟා මහ මැතිවරණයට මුහුණ දීමට එයට තිබූ අවස්ථාව නැති විය. අද එයින් හමන්නේ එතනෝල් සහ කුඩු ගඳය.
රාජපක්ෂ ප්‍රථම පණ්ඩිතකම කළේ බල තන්හාව සහ දෛවඥයින්ගේ වඳුරු උපදෙස් නිසා නම් දෙවන පණ්ඩිතකම කළේ වලිග වහල්ලු සහ අංක ගණිතය මිස වීජ ගණිතය නොදන්නා නිසා ය.
රාජපක්ෂ වහලුන්ගේ තර්කය මෙසේ ය. ජනාධිපතිවරණයේ දී රාජපක්ෂ ලක්ෂ 58ක් ගත්තේ ය‍. සිරිසේනට ලැබුනේ ලක්ෂ 62කි. එම ලක්ෂ 62කට දෙමළ ජන්ද උතුරු නැගෙනහිර දෙමළ ජන්ද ලක්ෂ 06ක් අයත් ය. ජනතා විමුක්ති පෙරමුණේ ජන්ද ලක්ස 03ක් අයත් ය. එම ජන්ද මහා මැතිවරණයේ දී එක්සත් ජාතික පෙරමුනට ලැබෙන්නේ නැත. එබැවින් ගෙඩිය පිටින්ම ජයග්‍රහණය රාජපක්ෂ ප්‍රමුඛ වහලුන්ට ය.
පසුගිය ජනාධිපතිවරණ සහ මහා මැතිවරණ දෙස විමසා බලන ඹ්නෑම අයකුට පෙනේනේ ඡන්ද දායකයාගේ හැසිරීම මෙවැනි අවස්ථාවන් දෙකෙක දී සහමුලින්ම වෙනස්වන බවයි. 2010 මහා මැතිවරණයේ දී රාජපක්ෂ හවුල ලබා ගත්තේ  2010 ජනාධිපතිවරණයේ දී රාජපක්ෂ ලබා ගත් ජන්ද සංඛ්‍යාවට වඩා ඡන්ද දශලක්ෂයක් අඩුවෙනි.  රාජපක්ෂ සහ එහි වහලුන් 2015 ජනාධිපතිවරණයේ දී යොදා ගත් රාජ්‍ය දේපල, රාජ්‍ය මාධ්‍ය සහ රාජ්‍ය බලය අද ඔවුන්ට නැත. අගමැති සහ ජනාධිපති යන දෙදෙනාම රාජපක්ෂ පරාජය කළ යුතු බවට ගිවිස ගෙන සිටිති. මේ සියල්ලටමත් වඩා රාජපක්ෂ පවුල සහ එහි වහලුන් කළ හොරකම් සහ මැරකම් අද ජනාධිපතිවරණ සමයේදීට වඩා සාධක සහිතවම මහා ජනයා හමුවෙහි තිබේ.
රාජපක්ෂගේ දෙවන  සහ අන්තිම පන්ඩිතකම විසින් රාජපක්ෂ විරෝධී කඳවුර ජනාධිපතිවරණයේ දී තිබුණාටත් වඩා සමගි සම්පන්න කර තිබේ. රාජපක්ෂ මහා මැතිවරණයට ඉදිරිපත් නොවූයේ නම් 2015 දී ජනාධිපති සිරිසේන වෙනුවෙන් ගොඩ නැගුණූ පෙරමුණ බිඳී විසිරී යන්නට හොඳටම ඉඩ තිබුණි. අද ජවිපෙ කරා ඇදී යන යම් යම් පිරිස් හැරුණ විට රාජපක්ෂ විරෝධී යහ පාලනය සඳහා වන එක්සත් ජාතික පෙරමුණ වඩා බලවත් එකතුවක් බවට පත්ව තිබේ. ජනාධිපතිවරණයේදී හතලිහක් පමණ වූ සිවිල් සහ වෘත්තිය සංවිධාන එකතුව අද වන විට දෙගුණයකටත් වඩා වැඩි වී ඇත.
එපමණක් නොවේ. රාජපක්ෂ කඳවුර තුළම රාජපක්ෂ විරෝධී ප්‍රබල දේශපාලනඥයින් ගණනාවක් ම සිටිති. රාජපක්ෂ විරෝධී පස්වන බලකාය වනු ඇත්තේ එම පිරිස් ය. ‘සිය කඳවුර බෙදී නැතැයි’ රාජපක්ෂ පුන පුනා කීවද සෑම දිසාවකම ජනාධිපති සිරිසේනගේ දේශපාලන පිළිවෙතට සහාය දක්වන ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂ දේශපාලනඥයින්ට හූ කීමත් ඔවුන් පරාජය කිරීමට කටයුතු කිරීමත් රාජපක්ෂ වහලුන්ගේ උපාය වී තිබේ. දැන් රාජපක්ෂවරු කියන්නේ ‘ හෙළවෙන්නේ නැති අයට‍’ ඡන්දය දෙන්නැයි කියා ය. වෙනත් වචනයෙන් ඉන්  කියන්නේ ජනාධිපති සිරිසේනගේ දේශපාලනය පරාජය කරන එකය.
එනයින් රාජපක්ෂගේ දෙවන පන්ඩිතකම විසින් කර ඇත්තේ ඔහුගේ දූෂිත භීෂිත දේශපාලනයට විරුද්ධ බලවේග සමගි කොට  ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂය බේද බින්න කිරීමය.  එය ඔහුගේ අවසාන පන්ඩිතකම වනු ඇත්තේ ඒ නිසා ය. පසුගිය මැතිවරණයන්හිදී අසන්නට ලැබුණේ එජාප සහ ජවිපෙ පාක්ෂිකයින් රාජපක්ෂ කරා ඇදී යන බවයි. මෙම මැතිවරණයේ දකින්නට ලැබෙන්නේ ඊට සහමුලින්ම වෙනස් ලෙස ශ්‍රීලනිප පාක්ෂිකයින් රාජපක්ෂ කඳවුර අතහැර යාමයි.
පළමු පන්ඩිතකම අනුව රාජපක්ෂ ජනාධිපතිවරණයේ දී  තමා ජයග්‍රහණය කළ හොත් කරනු ලබන වැඩ සටහනක් ඉදිරිපත් කළේ ය. දැන් ඉන් මාස හයකට පසු රාජපක්ෂගේ පොරොන්දු මල්ල ඊට හාත්පසින්ම වෙනස් ය. තමාගේ දස වසරක පාලන කාලය තුළ මෙරට මහා ජනයා අමතක කර සිය පවුල සංවර්ධනය කරගත් රාජපක්ෂ දැන් තමා අගමැති කරන ලෙස යදිමින් ගයන්නේ අලුත් සිංදුවකි. ඔහුගේ පාලන කාලය අසාර්ථක වූ බව රාජපක්ෂගේ ඡන්ද සටන් පාඨයෙන්ම පිළිගෙන තිබේ. ඉන් කියැවෙන්නේ ‘අලුතින්ම පටන් ගමු’ කියා ය‍.  ඒ වනාහී රාජපක්ෂගේ දෙවන සහ අන්තිම පන්ඩිතකම තුල පැටව් ගසා ඇති පුංවි පුංවි පන්ඩිතකම්වලින් එකක් පමණි.
රාජපක්ෂගේ මේ අන්තිම පන්ඩිතකම දැසින්ම බලා ගැනීමට අවශ්‍යනම් කළ යුත්තේ මේ දිනවල කුරුණෑගල දිසාව පැත්තේ ඇවිද බැලීම යි.  එතනෝල් ජාවාරම්කාර සහ තැබෑරුම්කාර රාජපක්ෂ වහලුන්ගේ කාර්යාලයන්හි මැස්සන් ඇහිරෙන අතර ශ්‍රී ලංකා නිදහස් පක්ෂයේ සිට යහ පාලන පෙරමුණට පැමිණි නාවින්නගේ කාර්යාලයෙහි මීමැසි පොදිමෙන් මහාජනයාගෙන් පිරී තිබේ. රාජපක්ෂ මැජික් එකක් කුරුණෑගල නැත. ඔහු අද තවත් එක් ඡන්ද අපේක්ෂකයෙක් පමණි.
තිත්ත නමුත් ඇත්ත පිළිගැනීමට රාජපක්ෂ සහ වහලුන්ට සිදුවූ විට ‘ අහෝ අප අන්තිම පන්ඩිතකමත් කළා නොවැ’යැයි කොඳුරන්නට වන දිනය එතරම් ඈත නොවේ.
-සුනන්ද දේශප්‍රිය
ලංකා ඊ නිවුස්

Tuesday, April 28, 2015

துப்பாக்கியுடன் மைத்திரி அருகில் வந்தவர் யார்? உண்மை ஏது என தெளிவுறுத்துகிறது மகிந்த ஆதரவு இணையத்தளம்!

April 28, 2015 at 12:01 am | Pariwarthanam.Blogspot.Com 

நாமல் ராஜபக்ஷவின் பாதுகாவலர் ஒருவர் துப்பாக்கியுடன் ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் அருகில் வந்தார் என அடிக்கடி வெளியாகின்ற செய்திகள் தொடர்பில் மகிந்த ராஜபக்ஷவின் ஆதரவாளர்களினால் செயற்படுத்தப்பட்டு வருகின்ற இணையத்தளம் ஒன்று கீழ்வருமாறு கருத்துரைத்துள்ளது. அதன் மீள்மொழிவு கீழ்வருமாறு -

தமிழில் - கலைமகன் பைரூஸ்

 [1]. ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவை கொலை செய்வது தொடர்பான செய்தியொன்றை ஐக்கிய தேசியக் கட்சியின் ஊடகப் பிரிவினர் கட்டவிழ்த்துள்ளனர். எங்களுக்குத் தெரிந்த வகையில் அந்த சேறுபூசுதலின் குறிக்கோள்கள் வருமாறு.

(i). மகிந்த ராஜபக்ஷவுக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பினைக் குறைப்பதற்கு ஆவன செய்வது.

(ii). மகிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக சேறு பூசுதல்.

(iii).
தர்க்க ரீதியாக பார்க்குமிடத்து, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் பாதுகாப்பு பெரும் அச்சுறுத்தல் விளைவிப்பது ஐதேக என்பதால் (அப்போதுதான் ரணில் விக்கிரமசிங்க இயல்புநிலையாக ஜனாதிபதியாவதால்) அவருக்கு ஏதேனும் ஒரு அசம்பாவிதம் நடைபெற்றால் அதனை மகிந்த பிரிவினரில் தலையில் தூக்கிப் போடுவதற்கு ஐக்கிய தேசியக் கட்சிக்கு தேவையேற்பட்டிருக்கின்றது.

[2]. அதில் ஒரு திட்டமாக, தற்போதைய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவின் மாமன் உறவுமுறையான ரஞ்சித் விஜேவர்தன மற்றும் மைத்துனரான  ருவன் விஜேவர்தன ஆகியோருக்குச் சொந்தமான “லங்காதீப”  பத்திரிகை மூலம் வெளியான செய்தியொன்றும்,

அந்தச் செய்தியானது இதனை விடவும் வித்தியாசமான முறையில் ஏனைய ஐதேக சேறுபூசும் இணையத்தளங்களில் பதிவேற்றப்பட்டிருந்தாலும், அவற்றின் உரிமையாளர்கள் வெளியீட்டாளர்கள் அல்ல என்பதால் எவ்வித பொறுப்புக்களும் இல்லையாதலால் அவர்களுக்கு எதனையும் எழுத முடியும் என்பதை பொதுமக்கள் கவனத்திற் கொள்வர் என நாங்கள் கருதுகின்றோம். அதனால் “லங்காதீப” பத்திரிகை பற்றி மட்டுமே நாங்கள் இங்கு சிந்தனையைச் செலுத்துவோம்.

(i). அங்குனுகொலபெலெஸ்ஸவில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் ஹம்பாந்தோட்டை மாவட்ட உறுப்பினர்களுக்கான கூட்டமே இடம்பெற்றது. என்றாலும் அக்கூட்டத்திற்கு பொதுமக்கள் அனைவருக்கும் திறந்த அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. நாமல் ராஜபக்ஷ, ஜனாதிபதி மைத்திரிபால சிரிசேனவின் அழைப்பின் பேரிலேயே அக்கூட்டத்தில் கலந்து கொண்டார். அவ்விடயம் பற்றி லங்காதீபவில் குறிப்பிடப்படவில்லை.

(ii). எந்தவொரு இராணுவ “கோப்ரல்” அல்லது வேறு எந்தவொரு இராணுவ அதிகாரியும் இதுவரை நாமல் ராஜபக்ஷவுக்கு பாதுகாப்பாளர்களாக இதுவரை வழங்கப்படவில்லை. எனவே, மேற்சொன்ன துப்பாக்கி ஏந்தி வந்த இராணுவ வீர்ர் நாமல் ராஜபக்ஷவின் பாதுகாப்பு அதிகாரி என குறிப்பிடுவது பொய்யாகும்.

(iii). அவ்வாறு அங்கு வந்திருந்தவர் இராணுவத்தினரிடம் இருந்து விடுகை பெற்று வந்துள்ள இராணுவ வீர்ரொருவரே. தனது பிரதேசத்தில் நடைபெறும் கூட்டமான்று என்பதனாலும், நாட்டின் ஜனாதிபதி, சபாநாயகர் உள்ளிட்ட நாட்டின் பிரபல்யங்கள் பலர் அக்கூட்டத்திற்கு வருகை தருவதால் அதனைக் கண்ணுறுவதற்காகவே அந்த இராணுவ வீர்ரும் அங்கு சமுகமளித்துள்ளார். சாதாரண பொதுமக்கள் அமர்ந்திருந்த இடத்திலேயே அவரும் உட்கார்ந்திருக்கின்றார். 


(iv). இனி, அவர் இராணுவத்தில் சேவை செய்யும் இராணுவ வீரர்களில் ஒருவர் என்பதால், ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவினர் (அவர்களும் இராணுவ வீரர்கள் ஆதலால்) அவரைத் தெரிந்துகொண்டுள்ளனர். ஏன் இங்கு வருகை தந்திருக்கின்றீர்கள் என வினவியிருக்கின்றனர். அவரும் பதில் கூறியிருக்கின்றார். (நாட்டின் ஜனாதிபதி, சபாநாயகர் ஆகியோர் வருகை தந்திருப்பதனால் அவர்களைப் பார்ப்பதற்காக அவர்களைப் பார்ப்பதற்காக வந்தேன்.)

(v).
அவரிடம் துப்பாக்கி இருக்கவே இல்லை. அவரிடம் அவ்வாறானதொரு துப்பாக்கி இருந்திருக்குமானால் அவர் அங்கு எவ்விதத்திலும் சென்றிருக்க முடியாது. இதனை நேரடியாகக் கண்ணுற்ற ஸ்ரீசுக உறுப்பினர்கள் எங்களிடம் அறிவித்தற்கு ஏற்ப, அவரிடம் ஒரு பணப்பை, நீரருந்தும் ஒரு “போத்தல்”, மற்றும் ஒரு கைக்குட்டை என்பன மாத்திரமே  இருந்திருக்கின்றன.

(vi). கீழ்வருவன “லங்காதீப”வில் பிரசுரமானவை -

பொலிஸ் விசேட பிரிவினர் நாமலின் பாதுகாப்பாளரைச் சோதனையிட்ட போது அவரிடம் துப்பாக்கியொன்று இருந்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. அவரை (அந்த இராணுவ வீரரை) அவ்விடத்தினின்றும் திருப்பியனுப்பியுள்ளனர்.

நல்லாட்சியில் வெளியான முக்கிய பொய் அங்குதான் முதலிடம் பெறுகின்றது. ஏதேனும் ஒருவகையில் நாட்டு ஜனாபதியின் பக்கமாக அனுமதியின்றி துப்பாக்கி அல்லது ஏதேனும் ஒரு (கூரிய) ஆயுதத்தை எடுத்துவருபவர் கைது செய்யப்பட வேண்டும். ஆயினும், “குறித்த நபர் அங்கிருந்து திருப்பியனுப்பப் பட்டார்” எனச் சொல்லப்பட்டுள்ளது. துப்பாக்கி ஒன்று கொண்டுவந்தார் எனும் கதை “பச்சைப் பொய்” என்பது இதிலிருந்து தெளிவாகின்றது. 

(vii). அவ் இராணுவ வீரர் கைது செய்யப்படவில்லை. அவர் எவ்விதக் குற்றமும் இழைக்கவில்லை ஆதலால், (அதாவது அவர் குறிப்பிடுகின்றது போல அவர் துப்பாக்கியொன்று கொண்டு வரவில்லை ஆதலால்) அவர் அங்கிருந்து அனுப்பிவைக்கப்பட்டார். கும்பிடப் போன கோயில் உடைந்து விழுந்தாற் போல, நாட்டின் புதிய ஜனாதிபதியைப் பார்வையிடுவதற்காக வந்தவரிடம் கேள்விக் கணைகள் தொடுத்த போது அவ்விராணுவ வீரர் சென்றுவிட்டார். விடுமுறை பெற்றுவந்துள்ள ஓர் இராணுவ வீரர் நாட்டின் ஜனாதிபதி கலந்து கொள்கின்ற கூட்டமொன்றைப் பார்ப்பதற்கு உட்காருவது தடை என்பதை நாங்கள் இப்போது ஊகித்துக் கொள்கின்றோம்.

(viii). தற்போதைய ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் முக்கியத்தரான எஸ்.எம். விக்கிரமசிங்க பற்றியும் லங்காதீப கட்டுரையில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது. நல்லாட்சி குறிப்பிடுவது போல ஜனாதிபதியின் அருகில் துப்பாக்கியொன்றுடன் அருகே செல்வதற்கு இடமளிக்கப்பட்டிருந்தால், அக்கணமே எஸ்.எம். விக்கிரமசிங்க பதவியிலிருந்து இடைநிறுத்தப்பட்டிருக்க வேண்டும். அவ்வாறு செய்யாமைக்குக் காரணம் அவ்வாறான துப்பாக்கியொன்று அங்கு காணப்படவில்லை என்பதனாலேயே ஆகும்.

[3]. முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தன்னுடைய கூட்டங்களுக்குச் சமுகமளிக்கும் எந்தவொரு நிராயுத இராணுவ வீரரரையும் திருப்பியனுப்புவதில்லை. அதுமட்டுமன்றி, அவர் வடக்கு கிழக்கில் யுத்தகளத்தில் இருந்த இராணுவ வீரர்களிடமும் சென்றார். இராணுவ வீரர்கள் படுபயங்கர ஆயுதங்களுடன் யுத்தம் செய்யும்போது அவர்களைக் காணச் சென்றார். யுத்தத்தை வென்ற தலைவனின் தன்னிகரற்ற செயல் அதுதான். வாகரையில்  பாரிய யுத்தத்தில் வெற்றிவாகை சூடிய இராணுவ வீரர்களுக்கு வாழ்த்துத் தெரிவிப்பதற்காகச் சென்றவேளை...

[4]. மகிந்த ராஜபக்ஷவுக்கு அச்சுறுத்தலாக புலிப் பயங்கரவாதிகளும் அவர்களின் ஒத்துழைப்பாளர்களும் இருந்தார்களேயன்றி இலங்கை இராணுவ வீரர்கள் அல்லர். அன்று மகிந்த ராஜபக்ஷவுக்கு அனைத்து முப்படைகளும் இருந்தபோதும், இன்று அவருக்கான பாதுகாப்பு மிகவும் குறைக்கப்பட்டுள்ளது.

(i). அதற்கான காரணமாக இருப்பது, மகிந்த ராஜபக்ஷ செல்லுமிடமெல்லாம் மக்கள் ஆயிரக் கணக்கில் அவரைச் சூழ்ந்துகொள்வதும், அது நல்லாட்சியிலுள்ள சிலரின் கண்களில் முள் தைக்க வைக்கும் விடயமாக இருப்பதனாலுமாகும்.

(ii). புலம்பெயர்ந்த தமிழர்களின் தடையை நீக்கியதோடு வெளிநாடுகளில் வசித்துவருகின்ற புலி ஆதரவாளர்கள் எவ்வித தடையுமின்றி ஸ்ரீலங்காவுக்கு வர முடியும் என்பதால் அவரின் பாதுகாப்பு பெரும் கேள்விக்குறியாக இருக்கின்றது.

(iii). லங்காதீபவில் குறிப்பிடப்பட்ட போலித் துப்பாக்கி போன்ற கதை, நல்லாட்சி அரசினாலும் கட்டவிழ்க்கப்பட்டமைக்கான காரணம் அதனைச் சரிசெய்வதற்கேயாகும்.

– mahinda.info

Saturday, April 11, 2015

ஞானசாரவின் மறுபக்கத்தை போட்டுடைக்கின்றார் முன்னாள் சகா.. மகள், மனைவி!


பரபரப்பூட்டும் அதிர்ச்சித் தகவல்கள்..??

(ஏ எம் எம் முஸம்மில்- பதுளை) 

கடந்த ஆட்சியின் போது “ பொது பல சேனா ” பௌத்ததீவிரவாத அமைப்பின் மூலம் இந் நாட்டில் இனவாத தீயை மூட்டி நாட்டை அழிவு பாதைக்கு இட்டுச் செல்ல முயன்றது நாடறிந்த உண்மையாகும். இவ்வியக்கத்தின் பிரதான தலைவர்களுள் செயலாளர் ஞான சாரவின் வகிபாகம் மிக முக்கியமானதாகும்.


இவர் முன்னைய அரசாங்கத்தின் பாதுகாப்புச் செயலாளர் கோதாபய ராஜபக்ஷவின் நேரடி கட்டளைப் படி இயங்கியவர் என்று பரவலாக பேசப் படுகின்றது.


ஆனால் ஆட்சி மாற்றத்தின் பின் இவ்வமைப்பு பற்றியும் இவ்வமைப்பின் பின்னணி பற்றியும் அவ்வப்போது பல ரகசியங்கள் வெளிவர தொடங்கியது. இவ்விரகசியங்களின் உச்சகட்டமாக “ பொதுபலசேனா ” அமைப்பின் மிக முக்கிய தொண்டராக செயற்பட்ட ஜா எல பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினராக இருந்த அஞ்சு பெரேரா என்பவரால் தற்போது வெளியிடப் பட்டிருக்கும் தகவல்கள் ஞான சார தேரரின் மறுபக்கத்தை தோலுரித்து காட்டியுள்ளது. அவர் கூறிய அதிர்ச்சித் தகவல்கள் கீழ்வருமாறு ……..
.

ஞான சாரவுக்கு தேவைப்பட்ட பி எம் டப்ளியு (BMW- Car) கார்வண்டியும், டிபென்டர்ரக கெப் வண்டியும்.

“ இந் நாட்டில் எம்மைவிட்டுப் பிரிந்த சோம தேரரை போன்ற ஆளுமை மிக்க பௌத்த தேரர் ஒருவர் இந் நாட்டிற்கு மிகவும் தேவை என நான் உணர்ந்திருந்தேன். அந்த இடைவெளியை நிரப்ப பிறப்பெடுத்தவர் தான் ஞானசார என்று எனதுள்ளம் சொல்லியது. அப்படி என் மனம் சொன்ன போதே நான் பொதுபல சேனாவுடன் இணைந்து கொண்டேன்.

பொது பல சேனாவின் பதுளை மாநாட்டின் பின்பே நான் ஞான சாரவுடன் நெருங்கி பழக ஆரம்பித்தேன். நெருங்கிபழக ஆரம்பித்த ஆரம்ப நாட்களில் இருந்தே பொது பல சேனாவின் எல்லாவகையான வேலைத்திட்டங்களிலும் மிகவும் விருப்பத்துடன் பங்கேற்றேன். ஞான சாரவுடன் நெருங்கிபழக ஆரம்பித்த கட்டத்தில் அவருக்கு தூர பயணங்களுக்காக தனிப்பட்ட வாகனம் ஒன்றிருக்க வில்லை என்பதை என்னால் அறிந்து கொள்ள முடிந்தது. அத்துடன் அப்போதைக்கு அவருக்கான அத்தியாவசிய தேவைகள் இரண்டினை மையப்படுத்தி எனக்கு உணர்த்தப் பட்டது. ஒன்று அவருக்கான பிரத்தியேக வாகனம், மற்றையது அவரது பாதுகாப்பு.

என்னிடத்தில் பி எம் டப்ளியு (BMW- Car) கார் ஒன்றும், டிபென்டர் ரக கெப் வண்டியுமாக இரண்டு வாகனங்கள் இருந்தன. ஞான சார தேரருக்காக அவ்வாகனங்களை வழங்குவதில் எனக்கு எந்த சிரமும் இருக்க வில்லை. ஆகவே அவற்றை நான் அவருக்காக வழங்க விருப்பத்துடன் முன்வந்தேன். மற்ற விடயம் நான் ஒரு அரசியல்வாதி என்ற ரீதியில் என்னுடன் எப்பொழுதுமே இளைஞர் கூட்டமொன்று கூடவே இருப்பார்கள். ஆகவே பாதுகாப்பிற்கு அவர்களை பயன்படுத்த நான் முன்வந்தேன். ஆகவே நாங்கள் பயணங்கள் போகும் போது ஞான சார தேரரை எனது கார்வண்டியின் முன் ஆசனத்தில் அமரச் செய்து, கெப் வண்டியில் இளைஞர் கூட்டத்தையும் ஏற்றிக்கொண்டு நாங்கள் பயணங்களை சென்று வந்தோம்.

ஆக, பி எம் டப்ளியு (BMW- Car) கார் ஒன்றும், டிபென்டர் ரக கெப் வண்டியும் ஞானசாரவுக்கு கிடைத்தாயிற்று. அத்துடன் ஞானசார ஹாமுதுருவுடன் மேலும் அண்மித்து பழகக் கூடிய வாய்ப்பும் கிடைத்தது.

முறையான தொரு வேலைத்திட்டமோ, திட்டமிட்ட செயற்பாடோ இல்லாத பொது பல சேனா

நாங்கள் வாகனத்தில் பல பயணங்களை சென்றோம் . பயணம் நெடுகிலும் பல விடயங்களைப் பற்றி பேசினோம். பி பி எஸ் சுக்கு வெளிநாட்டு பணம் வருகின்றது என்பதை ஆரம்பத்தில் நான் நம்ப வில்லை. அனால் இவர்களுக்கு பல வெளிநாட்டு தொடர்புகள் உண்டு, நான் ஞானசார ஹாமுதுருவுடன் ஒன்றாக இருந்தாலும் பி பி எஸ் பற்றி நான் அவதானித்த விடயம் தான் இவர்களுக்கென்று திட்டமிட்ட செயட்படொன்று கிடையாது. மாநாடுகள் செய்கின்றார்கள், கூட்டங்கள் நடத்துவார்கள் ஊடக சந்திப்புகளை நடத்துவார்கள், சுற்றிவளைப்பு நடவடிக்கைகளை செய்வார்கள், ஆனால் அதற்கு அடுத்த கட்டமாக என்ன செய்ய வேண்டும் என்று தேசிய ரீதியிலானதொரு முறையான திட்டம் கிடையாது. நான் இதுபற்றி ஹாமுதுருவுடன் நேரடியாகவே பல முறைகள் கதைத்துள்ளேன். ஆனால் ஒன்றும் பலனளிக்க வில்லை.


பிரான்சில் இருந்து வந்த ஞான சாராவின் மகளும், மகளின் தாயும்.

ஞானசார ஹாமுதுருவின் தனிப்பட்ட வாழ்க்கையில் நிறைய பிழைகள் பிரச்சினைகள் இருப்பதை நான் அறிந்து கொண்டேன் . ஆனாலும் இவர் பற்றிய உண்மைத்தகவல்கள் வெளியுலகத்திட்கு தெரிய வருவதால் எமது இயக்கத்திற்கும் அதன் தேசிய வேலைத்திட்டத்திட்கும் பாதிப்புகள் ஏற்படும் என்ற காரணத்தால் இவரின் குறைகளை பொறுத்துக் கொண்டிருக்க முடிவு செய்திருந்தேன்.

இவர் பற்றிய உண்மைத்தகவல்கள் எனக்கு எவ்வாறு தெரிய வந்ததென்றால், ஒருநாள் ஞானசார ஹாமுதுரு என்னிடத்தில் சொன்னார், “ தம்பி பிரான்சிலிருந்து அக்கா ஒருவர் வருவார், அவர் எமக்கு மிக வேண்டியவர். எமது இயக்கத்திற்கும் நிறைய உதவி செய்பவர். அவர் வந்தால் நாங்கள் அவருக்கு உதவி செய்ய வேண்டும், நீங்கள் உதவி செய்வீர்கள் தானே.” என்று என்னிடம் கேட்டார். நானும், “ நீங்கள் எந்த உதவியைகேட்டாலும் நான் செய்து தர காத்திருக்கின்றேன் வேண்டியதை கேளுங்கள் ” என்று அவருக்கு தெரிவித்தேன்.

பிரான்சிலிருந்து அந்த அக்காவும் வந்தார். பொல்கஹவலயில் உள்ள கிரிபத்கொட ஞானானந்த ஹாமுதுருவின் சமய மத்தியச்தானமொன்றில் ஏற்பாடு செய்யப் பட்டிருந்த வழிபாட்டு நிகழ்வொன்றில் வைத்தே நான் அந்த அக்காவை முதன் முதலில் சந்தித்தேன். அவரின் பெயர் “மனோஜா” என்று எனக்கு அறிமுகம் செய்து வைக்கப் பட்டது. அவருடன் இன்னும் இரண்டு பெண் பிள்ளைகளும் கூட இருந்தார்கள்.

பொலன்னறுவைக்கு சுற்றுலா சென்ற ஞானசார ஹாமுதுருவின் குடும்பம்

பொல்கஹவெல சமய நிகழ்வு முடிந்தவுடன் ஞானசார ஹாமுதுரு என்னிடம் சொனார்,” தம்பி அக்காமார்களை இன்னும் எங்கும் கூட்டி போகவும் இல்லையே. நாங்கள் அப்படியே கொஞ்சம் பொலன்னறுவைக்கு சென்று வருவோம். காடு, மரமட்டைகளை அவர்களுக்கு காட்டிய மாதிரியும் இருக்குமல்லவா ? என்று. நானும், “ஆம் சென்று வரலாம்” என்று கூறியதும் நாங்கள் பொலன்னறுவைக்கு சென்றோம். எனது வாகனத்தின் முன் ஆசனத்தில் ஞான சார ஹாமுதுரு அமர்ந்திருந்தார். பின் ஆசனத்தில் மனோஜா அக்காவும் பெண் பிள்ளைகள் இருவரும் அமர்ந்திருந்தனர். அவர்களின் பெரிய பிள்ளைக்கு சுமார் பதினாறு வயது மதிக்க கூடியதாக இருந்தது. இளைய பிள்ளைக்கு சுமார் பதினான்கு வயது இருக்கும்.

பயணத்தில் இடையில் வாகனத்தை கொஞ்சம் நிறுத்துமாறு ஞானசார என்னிடம் கூறினார். வாகனத்தை நிறுத்தியதும் ஞானசார ஹாமுதுரு பின் ஆசனத்திட்குச் சென்று பெரிய பெண் பிள்ளையை முன் ஆசனத்திற்கு அனுப்பினார். இரண்டு பிள்ளைகள் இருக்கும் போது இளைய பெண்பிள்ளைக்கு அளவில்லா அன்புகாட்டுவதை அவதானிக்க முடிந்தது. நன்கு புஷ்டியாக வளர்ந்திருந்த அந்த பிள்ளைக்கு ஞான சார ஹமுதுருவின் முக சாயல் அப்படியே இருந்தது, அப்பிள்ளையின் முகத்தை தனது மடியில் சாத்திய ஞானசார அவளின் தலையை கோதிவிட்டு ஆதரவுடன் தழுவிக் கொண்டு வந்தார். அப்போது தான் இந்த பிள்ளை ஞானசாரவுடையதாக இருக்குமோ என்று எனக்குள் சந்தேகம் ஏற்படத் தொடங்கியது.

இளைய பெண்பிள்ளை தனது மகள் என்று ஒப்புதல் வாக்கு மூலம் தந்த ஞானசார

பொலன்னறுவைக்கு சென்ற நாங்கள் மாலை நேரம் ஓய்வு எடுப்பதற்கு தனியானதொரு ஹோட்டல் ஏற்பாடு செய்யப் பட்டிருந்தது. நந்த ஹாமுதுருவின் வண்டி ஓட்டுனர் மற்றும் அந்த வாகனத்தில் வந்த இன்னும் சில ஹாமுதுருமாரும் ஒரு பிரத்தியேக அறையில் தங்கினார்கள். நாங்கள் பிறிதொரு பக்கத்தில் வேறொரு அறையில் தங்கினோம். இவ் ஏற்பாடுகளை ஞானசார ஹாமுதுரு தொலைபேசி மூலம் ஏற்கனவே ஏற்பாடு செய்திருந்தார். என்பது குறிப்பிடத் தக்கது. சற்று நேரம் ஓய்வெடுத்த நாம் மீண்டும் எழுந்து மின்னேறிய யானைகள் பார்க்கச் சென்றோம் . யானைகள் பார்த்துவிட்டு நாங்கள் கொழும்பை நோக்கி பயணமானோம். வரும் வழியில் இவர்களின் நடத்தைகளை வைத்து, குறிப்பிட்ட பெண் பிள்ளை ஞானசாரவினுடையது தான் என்பதை நான் ஊர்ஜிதப் படுத்திக் கொண்டேன். ஓரிடத்தில் வைத்து ஞானசார ஹாமுதுருவே என்னிடத்தில் சொன்னார், “அந்த பிள்ளையின் தந்தை நான்தான்” என்று. எனது ஊகமும் சரியாகிட்டு.

கொழும்பில் டெனிஸ் விளையாடிய ஞானசாரவின் மகள்

குறிப்பிட்ட பெண் பிள்ளை தன்னுடையது என்று கூறிய ஞானசார ஹாமுதுரு, அவள் ஒரு டெனிஸ் வீராங்கனை என்றும் அவள் பிரான்சிற்கு திரும்பி சென்றதும் டெனிஸ் போட்டித் தொடரொன்றில் ( tennis tournament ) விளையாட இருப்பதாகவும் என்னிடம் சொன்ன அவர் போகும் வரைக்கும் அவளுக்கு டெனிஸ் பயிற்சி பெற நல்லதொரு இடத்தை தெரிவு செய்து தருமாறும் வேண்டினார்.

ரத்ன பிட்டி சிங்காரா டெனிஸ் கழகத்தின் எனக்கு தெரிந்த என் நண்பர் ஒருவர் மூலமாக நான் அந்த ஏற்பாட்டை செய்து கொடுத்தேன். பின்பு நானே அவளை தினமும் மாலையில் டெனிஸ் விளையாட வாகனத்தில் கூட்டிச் செல்வதும் விளையாடி முடிந்ததும் மீண்டும் கூட்டிவருவதுமாக பல உதவிகளை செய்தேன். அந்த நாட்களில் ஹாமுதுரு சொல்லும் இடங்களுக்கெல்லாம் அவர்களை நான் கூட்டிச் செல்வேன். அவர்களின் குடும்பத்தில் ஒருவனாகவே பல உதவிகளை செய்து கொடுத்தேன்.

தனது குடும்பத்துடன் தனியாக வாடகை வீடொன்றில் தங்கிய ஞானசார

நாங்கள் மஹியங்கனையில் நடைபெற்ற பௌத்த மாநாடிட்கு சென்று திரும்பி வருகையில் ஞானசார தேரரின் ஆலோசனைப்படி கண்டியூடாக சென்று மடவளை பன்சலையில் நடைபெற்ற நிகழ்வொன்றில் கலந்து கொண்டு மீண்டும் நுவரெலியா சென்று சில நாட்கள் தங்க திட்டமிட்டிருதோம். நாங்கள் நுவரலியா செல்லும் வழியில் ஏற்கனவே ஏற்பாடு செய்யப் பட்ட ஒரு வாடகை வீட்டில் ஞானசார தேரர் மனோஜா அக்கா மற்றும் பிள்ளைகளுடன் தனியாக தங்குவதாக சொன்னார். என்னுடன் இருந்த எனது நண்பர்களை திருப்பி அனுப்பிவிடும்படி என்னிடம் வேண்டினார். அவர்கள் சென்று விட்டால் என்னால் தனியாக இருக்க முடியாது என்று கூறி நான் அதை மறுத்து விட்டேன். பிறகு நாங்கள் எனது சொந்த செலவில் தனியாக வேறொரு இடத்தில் தங்கினோம்.

ஒரு நாளைக்கு இருபத்தி ஐந்தாயிரம் ரூபாவீதம் செலவழித்து நான்கு நாட்கள் வாடகை வீட்டில் குடும்பத்துடன் தங்கிய ஞானசார தேரர்.
அடுத்த நாள் காலை என்னை சந்தித்த ஞானசார ஹாமுதுரு, “ தம்பி இந்த வீடு எங்களுக்கு செட்டாக வில்லை . நாங்கள் வேறொரு வீட்டை வாடகைக்கு ட்ரை பண்ணுவோம் என்று கூறினார். பிறகு நாங்கள் பண்டாரவெல வீதியில் இருந்த ஒரு பங்களாவை வாடகைக்கு எடுத்தோம் அதற்கு ஒரு நாளைக்கு இருபத்தி ஐந்தாயிரம் ருபாய் வாடகை செலுத்த தீர்மானிக்கப் பட்டது. அதில் அவர்கள் நான்கு நாட்கள் தங்கியிருந்தார்கள். நாங்கள் வேறாக தங்கினோம். அதன் பிறகு அந்த வீட்டிற்கு நான் அடிக்கடி செல்வதை தவிர்த்து வந்தேன். ஏன் என்றால் அவரின் தனிப்பட்ட வாழ்க்கை பற்றி எனக்கு தெரிந்திருந்தது. அடிக்கடி சென்று அவரை அசௌகரிய படுத்த நான் விரும்ப வில்லை.

ஒரு சுற்றுலா பயணியைப் போல் பெண்களுடன் சேர்ந்து நீர்வீழ்ச்சியில் குளித்து மகிழ்ந்த ஞானசார

பிறகு நாங்கள் நுவரேலியா வழியாக ரம்பொட பாஸ் நீர்வீழ்ச்சியின் அருகினால் திரும்பி வருகையில் நீர்வீழ்ச்சியில் குளிக்கும் எண்ணம் ஏற்படவே ஆண்கள் பெண்கள் எல்லோரும் சேர்ந்து குளிக்க ஆரம்பித்தோம். எங்களுடன் சேர்ந்து ஞானசாரவும் குளிக்க ஆரம்பித்தார். இவரின் செயற்பாடுகள் எனக்கு அருவருப்பாக இருந்தது. நாடறிந்த ஒரு பௌத்த தேரர், பௌத்த அமைப்பொன்றின் பிரதான தலைவர், எவரும் கண்டவுடன் அடையாளம் காணக்கூடிய ஒரு முன்னணி துறவி இவ்வாறு எந்த வித அச்சமும் இன்றி பெண்களுடன் சேர்ந்து பகிரங்கமாக குளிப்பது எந்த வகையிலும் என்னால் ஏற்றுக் கொள்ள முடியாதிருந்தது.

வாகனம் ஓட்ட ஆசைப்பட்ட ஞான சார தேரர்

குளித்து முடிந்து நாங்கள் மீண்டும் பயணப்பட்டோம். மனோஜா அக்கா மற்றும் பிள்ளைகள் முன்னால் வந்த வாகனத்தில் ஏறி இருந்தார்கள் . முன்னாள் ஞானசார ஹாமுதுருவும் நானும் எனது வாகனத்தில் புறப்பட்டோம். பின்னால வந்த வாகனத்தை தாண்டி சற்று தூரம் முன்னால் நாங்கள் சென்று கொண்டிருக்கையில் ஞானசார ஹாமுதுரு என்னிடத்தில் கேட்டார் , “ தம்பி நான் வாகனம் ஒட்டி ரொம்ப நாள் ஆகுது. எனக்கு கொஞ்சம் ஓட்ட தாருங்கள் என்று” நானும் வேறு வழியின்றி வாகனத்தை பக்கத்தில் நிறுத்திவிட்டு அவருக்கு வண்டியை ஓட்ட இடமளித்தேன். அவர் வாகனம் ஓட்ட ஆரம்பித்து சற்று நேரத்தில் எனது கைப்பேசிக்கு மனோஜா அக்கவிடமிருந்து ஒரு அழைப்பு வந்தது. அவர் கேட்டார் தம்பி யார் வாகனம் ஒட்டுவதென்று . நான்தான் என்று நான் அவருக்கு பொய் சொன்னேன். பின் அவர் மீண்டும் என்னிடம் சொன்னார், “தம்பி பொய் சொல்ல வேண்டாம் . உடனே நீங்கள் வாகனத்தை எடுக்க வேண்டும் . நீங்கள் வாகனத்தை எடுக்காவிட்டால் நான் ஒரு அடி கூட முன்னால் நகர மாட்டேன் என்று அவருக்கு சொல்லுங்கள் ” என்று திட்டவட்டமாக மனோஜா அக்கா என்னிடம் தெரிவித்து விட்டார். நான் ஞானசார ஹாமுதுருவிடம் நிலைமையை விளக்கிச் சொன்னேன்.

மனோஜா வுக்கு தூசணத்தால் திட்டிய ஞானசார

பிடிவாதமாக வாகனத்தை எனக்கு எடுக்க சொன்ன மனோஜா வாகனத்தை நான் எடுக்காவிட்டால் ஒரு அடி கூட முன்னால் நகர மாட்டேன் என்று சொன்னதால் வேறு வழியின்றி வாகனத்தை நிப்பாட்டி விட்டு, “ இந்த பெண் பிராணன்களால் ஒன்றுமே செய்ய முடியாது என்று கூறிவிட்டு தூசன வார்த்தை ஒன்றையும் கூறி மறுபக்கத்தால் வந்து அமர்ந்து கொண்டார். ஒருவாறு இப்படி நடந்ததும் நல்லது என்றே என் மனது சொன்னது. ஏன் என்றால் ஞானசார தேரருக்கு முறையாக வாகனம் ஓட்டத் தெரியாது. எங்காவது சென்று மோதிவிடுவாரோ என்று உள்ளத்தால் பயந்துகொண்டே அப்போது நானிருந்தேன்.

குறிப்பிட்ட அந்த பயணத்தின் போது எனக்கு மாற்றி அணிய ஆடைகளைக் கூட எடுக்காமல் தான் நான் இவர்களுடன் இணைந்திருந்தேன். அதே போல் அந்த பயணத்தின் போது எனது இளைய மகன் சுகவீனமுற்றிந்தான். அதனையும் பொருட்படுத்தாது மிகவும் சிரமத்திற்கும் தியாகத்திற்கும் மத்தியில் தான் இவர்களோடு சேர்ந்து பயணப் பட்டிருந்தேன்.

நான் ஞானசாரவை பாதுகாக்க வேண்டியதன் அவசியத்தை வெகுவாக உணர்ந்திருந்தேன் ஏன் என்றால் தேசிய மட்டத்திலான பௌத்த வேலைத்திட்டமொன்று எமது நாட்டிற்கு மிகவும் தேவை என்று உணர்ந்திருந்ததால். பௌத்த மக்கள் பல வேலைத்திட்டங்களிலும் இணைந்திருது ஏமாற்றப் பட்டு ஏமாற்றப் பட்டுத்தான் இப்போது பி பி எஸ் சுடன் இணைந்துள்ளார்கள். இவர்களின் உண்மை முகம் தெரிய வந்தால் மக்கள் மீண்டும் விளகிச் சென்று விடுவார்கள். அதனால் தான் மனசாட்சிக்கு எதிராக இருந்தாலும் இவரை பாதுகாத்துக் கொண்டு நான் இவர்களுடன் சேர்ந்திருந்தேன். ஆனால் இவர்களின் உண்மையான தேவைப்பாடு ஒரு பௌத்த ராஜ்ஜியம் இல்லை. தமது சொந்த நலனிற்காக சௌகாிய வாழ்க்கையை அனுபவிக்க இவர்கள் இந்த பி பி எஸ் சை நடத்துகின்றார்கள். இது நிறுத்தப் படவேண்டும். இவர்களின் உண்மை முகத்தை மக்களுக்கு காட்டவேண்டும்.

நான் மேற்சொன்னவை பொய் என்று நிரூபித்து காட்டுமாறுஞான சார தேரருக்கும் பி பி எஸ் தலைவர்களுக்கும் பகிரங்க சவால் விடுகின்றேன். மனோஜாவை பற்றி அவ்வப்போது சில தகவல்கள் பேஸ் புக்கிலும் சில ஊடகங்களிலும் வெளிவந்தன. அவை இந்த மனோஜா பிரான்சிலிருந்து பி பி எஸுக்கு உதவி செய்பவர் என்றுதான் இவர்கள் அறிந்து வைத்துள்ளார்கள் . ஆனால் ஞாசாரவுக்கும் மனோஜாவுக்கும் உள்ள தொடர்பை பற்றி பி பி எஸ் தலைவர்களுக்கு தெரியுமா என்பது பற்றி நான் அறியவில்லை..

முடியும் என்றால் நான் குறிப்பிட்ட பெண் பிள்ளை ஞானசாரவின் மகள் இல்லை என்பதை ஒரு “டி என் ஏ ” பரிசோதனை மூலம் நிரூபிக்க முடியுமா என்று நான் இவர்களுக்கு சவால் விடுகின்றேன். இதற்காக இந் நாட்டின் எந்தவொரு நீதி மன்றத்தையும் நான் சந்திக்கத் தயார்” என்றும் “ பொதுபலசேனா ” அமைப்பின் மிக முக்கிய தொண்டராக செயற்பட்ட ஜா எல பிரதேச சபையின் ஆளும் கட்சி உறுப்பினராக இருந்த அஞ்சு பெரேரா சவால் விட்டு ஞானசாரவின் உண்மை முகத்தை உலகிற்கு காட்டியுள்ளார்.


Sunday, February 22, 2015

முடிந்தால் என்னைத் தேர்தலில் தோற்கடிக்கவும்!

மகிந்தவுக்கு ரணிலின் சவால்!!

முடியுமாயின் எதிர்வரும் தேர்தலில் தன்னை தோற்கடித்து வெற்றியீட்டுமாறு பிரதமர் ரணில் விக்கிரமசிங்க முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷவுக்கு சவால் விடுத்துள்ளார்.

நேற்று புத்தளம் மாவட்ட ஐக்கிய தேசியக் கட்சியின் செயற்பாட்டாளர்களுக்கான கூட்டமொன்றில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே இச்சவாலை பிரதமர் விடுத்துள்ளார்.

முன்னாள் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் அவரது வாக்குகளை தன்னால் 50 இலட்சத்தை விடவும் குறைக்கவியலும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

(கேஎப்)


Thursday, February 12, 2015

இலங்கையின் அரியாசனத்தில் அமர்ந்த ஜனாதிபதிகளின் கல்வித் தகைமைகள்!


1978 ஆண்டிலிருந்து இலங்கையின் நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக அரியாசனத்தில் அமர்ந்தோரின் எண்ணிக்கை மொத்தம் 06. அவர்களின் கல்வித் தகைமை வருமாறு - 

ஜே.ஆர். ஜயவர்த்தன (1978 பெப்ரவரி 04 - 1989 ஜனவரி 02)
JR
ஜே.ஆர். ஜயவர்த்தன தனது ஆரம்பக் கல்வியை கொழும்பு பிசப் கல்லூரியில் பெற்றுக் கொண்டார். கொழும்பு ராஜகீய வித்தியாலயத்தில் இடைநிலைக் கல்வியைத் தொடர்ந்த அவர், கொழும்புப் பல்கலைக் கழகத்திலும் சட்டக் கல்லூரியிலும் தனது உயர்கல்வியைப் பெற்றுக் கொண்டார். 

ஆர். பிரேமதாச (1989 ஜனவரி 02 - 1993 மே 01)
RP
கொழும்பு புனித ஜோசப் கல்லூரியின் பழைய மாணவர்.

டீ.பீ. விஜேதுங்க (1993 மே 02 - 1994 நவம்பர் 12)
DB
கம்பொல புனித அன்ரூ வித்தியாலயத்தின் பழைய மாணவர்களுள் ஒருவர் 

சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க (1994 நவம்பர் 12 - 2005 நொவம்பர் 19)
CBK
கொழும்பு பிரிஜட் கன்னியர்மட பழைய மாணவி. பாரிஸ் பல்கலைக்கழக (சோபோன் பல்கலைக் கழகம்) அரசியல் விஞ்ஞான, சர்வதேச தொடர்பாடல் தொடர்பிலான பட்டதாரி

மகிந்த ராஜபக்ஷ (2005 நொவம்பர் 19 - 2015 ஜனவரி 09)
MR
காலி ரிஷ்மண்ட் கல்லூரி, கொழும்பு நாலந்தா வித்தியாலயம் , தர்ஸ்டன் வித்தியாலயம் என்பவற்றின் பழைய மாணவர். ஸ்ரீலங்கா சட்டக் கல்லூரியில் உயர் கல்வியைப் பெற்றுள்ளார். 

மைத்திரிபால சிரிசேன (2015 ஜனவரி 09 முதல்)
MS
 பொலன்னறுவை மகா வித்தியாலயம், ராஜகீய வித்தியாலயம் என்பவற்றின் பழைய மாணவர்களுள் ஒருவர். குண்டசாலை விவசாயக் கல்லூரியின் விவசாய டிப்ளோமாவைப் பெற்றுள்ள இவர், ரஷ்யாவின் மர்சிம் கோர்க்கி நிறுவனத்தில் அரசியல் விஞ்ஞானம் தொடர்பிலான டிப்ளோமாவைப் பெற்றுள்ளார். 

(-கலைமகன் பைரூஸ்)