ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பொது
வேட்பாளருக்கு ஆதரவு தர வந்திருப்பது முஸ்லிம் அலகு கேட்டல்ல என ஜாதிக்க ஹெல
உறுமயவின் பொதுச் செயலாளர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கூறுகின்றார்.
மைத்திரிபால சிரிசேன, அம்பாறை
மாவட்டத்தில் தனியான முஸ்லிம் அலகினைத் தருவதற்கு முஸ்லிம் காங்கிரஸுடன் எந்தவொரு
உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை. இவ்வாறான பொய்ப் பிரச்சாரம் ஒன்று
முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. இது வெறும் பொய் என சம்பிக்க கொழும்பில்
இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் குறிப்பிட்டார்.
“மைத்திரிபால சிரிசேனாவின் பொதுக் கொள்கை வெளியீட்டுடன்
உடன்படுபவர்கள் மாத்திரமே கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். இதுதான் எல்லோரினதும்
கொள்கையாகும். அது பொதுக் கொள்கையே தவிர ரவூப் ஹக்கீமினதோ, சம்பிக்க ரணவக்கவினதோ,
ரணில் விக்கிரசிங்கமவினதோ கொள்கையல்ல. பொதுக் கொள்கையின் அடிப்படையில் நாம்
செயற்படுவதால் எந்தவொரு முறையிலும் முஸ்லிம் அலகு வழங்குவதற்கு வாக்குறுதி
வழங்கப்படவில்லை” எனவும் ரணவக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.
(கேஎப்)