It

Tuesday, December 30, 2014

ரவூப் ஹக்கீம் முஸ்லிம் நாடு கேட்கவில்லை...! – சம்பிக்க

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், பொது வேட்பாளருக்கு ஆதரவு தர வந்திருப்பது முஸ்லிம் அலகு கேட்டல்ல என ஜாதிக்க ஹெல உறுமயவின் பொதுச் செயலாளர் பாட்டாலி சம்பிக்க ரணவக்க கூறுகின்றார்.

மைத்திரிபால சிரிசேன, அம்பாறை மாவட்டத்தில் தனியான முஸ்லிம் அலகினைத் தருவதற்கு முஸ்லிம் காங்கிரஸுடன் எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை. இவ்வாறான பொய்ப் பிரச்சாரம் ஒன்று முன்னெடுத்துச் செல்லப்படுகின்றது. இது வெறும் பொய் என சம்பிக்க கொழும்பில் இடம்பெற்ற ஊடகச் சந்திப்பில் குறிப்பிட்டார்.

மைத்திரிபால சிரிசேனாவின் பொதுக் கொள்கை வெளியீட்டுடன் உடன்படுபவர்கள் மாத்திரமே கட்சியில் இணைத்துக் கொள்ளப்படுகின்றனர். இதுதான் எல்லோரினதும் கொள்கையாகும். அது பொதுக் கொள்கையே தவிர ரவூப் ஹக்கீமினதோ, சம்பிக்க ரணவக்கவினதோ, ரணில் விக்கிரசிங்கமவினதோ கொள்கையல்ல. பொதுக் கொள்கையின் அடிப்படையில் நாம் செயற்படுவதால் எந்தவொரு முறையிலும் முஸ்லிம் அலகு வழங்குவதற்கு வாக்குறுதி வழங்கப்படவில்லை” எனவும் ரணவக்க மேலும் குறிப்பிட்டுள்ளார்.

(கேஎப்)


Wednesday, December 24, 2014

எனக்குப் பயனேது? (கவிதை)



வைத்தியர் கொடுத்த துண்டு என் கையிலே
மருந்து வாங்க ஐந்து சதம் இல்லை கையிலே
மரண பயம் இப்போது என் மனதிலே 
கொடுத்த துண்டினால் பயனேது என்னிலே!

வடக்கின் வாக்குகள் யாருக்கு?


ரீ.என்.. இம்முறை ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்குமா?”
பொது வேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவுக்கு ஒத்துழைப்பதற்கு மைத்திரி ரீ.என்.ஏ இடையே கைச்சாத்து
“சம்பந்தன் இந்தியாவுக்குச் சென்று இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்காக செய்ய வேண்டியது என்ன? என இந்தியத் தலைவர்களுடன் பேச்சுவார்த்தை”
ஜனாதிபதித் தேர்தல் நடைபெற இருக்கின்ற சொற்ப காலத்திலும் கூட இப்பேச்சுக்கள் அடிக்கடி அடிபடுகின்றன. தலைப்பு யாதெனில், தமிழ் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவு யாருக்கு என்பதாகும். சென்ற வாரம் லங்காதீப பத்திரிகையின் முதல் பக்கச் செய்தியில், எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்கவுள்ளதாகவும், பொது வேட்பாளர்கள் இருவரிலும் யாரேனும் ஒருவருக்கு உதவ முன்வருவதாகவும், பொது வேட்பாளரான மைத்திரிபால சிரிசேனவுக்கு ஆதரவு நல்கவுள்ளதாகவும, ரீ.என்.ஏ மூன்றாகப் பிரிந்து தங்களது பிரிவுக்குள் கட்சியை வழிநடாத்திச் செல்வதற்கு முயல்வதாகவும் குறிப்பிட்டிருந்தது. 

2010 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் நெருங்கும்போது ரீ.என்.ஏ பொன்சேக்காவின் வழியிலேயே நின்றிருந்தது. என்றாலும், இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் ரீ.என்.ஏ. எந்தப் பாதையைத்தான் தெரிவு செய்கின்றது என்பது கேள்விக்குறியாகவே உள்ளது. ஒருபுறம் ஜனாதிபதி மகிந்தவின் வழியில்… மறுபுறம் பொதுவேட்பாளர் மைத்திரியின் வழியில். அவ்வாறன்றி வேறுபாதைகள் அவர்களுக்குக் காட்சியளிக்க மாட்டாது எனக் குறிப்பிட முடியும். மற்றொரு புறத்தில் எல்.ரீ.ரீ. யினரின் போர்த் தோல்வியும், தேசிய பிரச்சினைக்கு தீர்வு தேடி பாராளுமன்றில் முன்வைக்கப்பட்டவை அரசினால் கண்டு கொள்ளப்படாமையும் ரீ.என்.ஏ வும் அரசாங்கமும் ஒரே பாதையில் பயணிப்பதில் தடையாக உள்ளது என்பது மட்டுமன்றி அவ்வாறு பயணிக்கும் என்று கற்பனை கூட செய்ய முடியாதுள்ளமையாகும்.

எது எவ்வாறாயினும் மீண்டும் ஒருமுறை வடக்கு கிழக்கின் வாக்குகளுக்கு அதிக பெறுமதியிருக்கத்தான் செய்கிறது. நாட்டின் ஏனைய பிரதேசங்களுடன் ஒப்பிடும்போது, வடக்கில் ஏழு இலட்சம் வாக்குகள்தான் இருக்கின்றன. என்றாலும், இந்த வாக்குகள் ஜனாதிபதித் தேர்தலைத் தீர்மானிப்பதில்லை எனச் சொல்லவியலாது. 2005 ஜனாதிபதித் தேர்தலின்போது இதுபற்றி நன்கு தெளிவானது. 2005 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலின்போது எல்.ரீ.ரீ.ஈ தலைவர் பிரபாகரனின் அச்சுறுத்தலினால் வடக்கு – கிழக்கில் உள்ள மக்கள் வாக்களிக்கவில்லை. ஆயினும், ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றது மகிந்தவே. மகிந்தவுக்கு 48,87,152 - (50.29%) வாக்குகள் விழும்போது, ரணிலுக்கு 47,06,366 - (48.43%) வாக்குகள் மட்டுமே விழுந்தது. இரண்டிற்கும் இடையிலான இடைவெளி 1,80,786 ஆக இருந்தது. 2005 இல் வடக்கின் வாக்குகள் அளிக்கப்பட்டிருந்தால் 2005 இல் நாட்டை ரணிலே பொறுப்பேற்றிருப்பார். இதன் சிறப்பு என்னவென்றால், ரணிலை விடவும் மகிந்தவுக்கான பௌத்தர்களின் பங்களிப்பு அதிகம் என்பதாகும். தெற்கின் சிங்கள சமூகத்தினிடையே மகிந்தவுக்கு வாக்குகள் கிடைத்தவாறே ரணிலுக்கும் கிடைத்தது என்பதுதான் வெளிப்படையான உண்மை. பெறுபேற்றின்படி மகிந்த இரண்டு இலட்சம் வாக்குகளை விடவும் குறைந்த அளவிலேயே அரியாசனத்தில் ஏறுவதற்கு வரம் பெற்றார்.


நாங்கள் இதுவரை முடிவெடுக்கவில்லை

தமிழ் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன்

கேள்வி : உங்களுக்கும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டதாக பேசப்படுகின்றதே. அதில் உண்மையுள்ளதா? 

கேள்வி : ரீ.என்.ஏ வில் ஒரு பகுதியினர் இம்முறை நடைபெறவுள்ள ஜனாதிபதித் தேர்தலை பகிஷ்கரிக்கவுள்ளதாகவும், இன்னொரு பகுதியினர் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்கவுள்ளதாகவும் கூறப்படுகின்றது. தாங்கள் ஏது செய்ய வேண்டும் என்று தீர்மானித்து விட்டீர்களா?
பதில் : நாங்கள் இதுவரை தீர்மானிக்கவில்லை. எங்கள் கட்சியின் தலைவர் ஆர். சம்பந்தன் இந்தியாவுக்குச் சென்றிருக்கின்றார். அவர் இலங்கைக்கு வந்ததும் நாங்கள் முடிவெடுப்போம்.


கேள்வி : என்றாலும் பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன், வடக்கிலுள்ள மக்கள் தங்களுக்கு விரும்பிய எந்தவொரு வேட்பாளருக்கும் வாக்களிக்கலாம் என்று குறிப்பிட்டிருந்தாரே?
பதில் : அது அவரது சொந்த முடிவாக இருக்கலாம். என்றாலும் நாங்கள் பொதுமக்களுக்குச் சொல்வது என்னவென்றால் தேர்தலில் வாக்களிப்பதற்காக வாக்குச் சாவடிகளுக்கு செல்லுங்கள் என்பதே. தமிழ் தேசியக் கூட்டமைப்பு எப்போதும் பொறுப்புடன் செயற்படுகின்ற கட்சி என்பதால், பொதுமக்கள் என்ன செய்ய வேண்டும் என்று சொல்லிக் கொடுக்க வேண்டிய தேவை எங்களுக்குள்ளது.

கேள்வி : உங்களுக்கும் பொதுவேட்பாளர் மைத்திரிபால சிரிசேனவுக்கும் இடையில் ஒப்பந்தம் ஒன்று கைச்சாத்திடப்பட்டதாக பேசப்படுகின்றதே. அதில் உண்மையுள்ளதா? 
பதில் : உண்மையில் மகிந்த ராஜபக்ஷவாக இருக்கட்டும், மைத்திரிபால சிரிசேனவாக இருக்கட்டும். இருவரில் எந்தவொரு நபரும் இதுவரை தமிழ் மக்களின் பிரச்சினைகள் தொடர்பில் இதுவரை எந்தவொரு கருத்தும் முன்வைக்கவில்லை. நாங்கள் இவை அனைத்து தொடர்பிலும் எங்கள் தலைவர் இலங்கைக்கு வந்தபின்னர் கலந்தாலோசித்து முடிவு எடுப்போம்.


நாங்கள் மைத்திரியுடன் எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை!
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரன் 


கேள்வி : எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலின்போது தமிழ் தேசியக் கூட்டமைப்பு என்ன செய்யப் போகிறது?
பதில் : நாங்கள் அதுதொடர்பில் இதுவரை தீர்மானிக்கவில்லை.

கேள்வி : அதை வைத்துக் கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு பிளவு பட்டுள்ளதாகக் கூறப்படுகிறதே?
பதில் : இல்லை. அவ்வாறான எந்தவொரு பிரச்சினையும் இல்லை. எங்கள் தமிழ் மக்கள் இருக்கின்ற இடங்களுக்குச் சென்று அது தொடர்பில் உரையாடி வருகின்றோம். என்றாலும், எந்தவொரு பிரச்சினையும் ஏற்பட்டதாக இல்லை.

கேள்வி : என்றாலும் உள்ளே ஒரு பிரிவினர் பொது வேட்பாளருக்கு ஆதரவு வழங்க வேண்டும் எனக் குறிப்பிடுகையில், தாங்களோ நீங்கள் விரும்பிய வேட்பாளருக்கு வாக்களியுங்கள் எனக் குறிப்பிடுகிறீர்கள். பிரச்சினையொன்று இருக்கின்றது தானே?
பதில் : இல்லை. பல்வேறு கருத்துக்கள் வெளிவருவது சாதாரணமானது. இந்நேரம் நாங்கள் பொதுமக்களின் கருத்துக்களை கணிக்கின்றபோது எல்லோரும் ஒரே கருத்தைச் சொல்ல மாட்டார்கள்தானே. அவ்வாறான அவர்கள் அனைவரினதும் கருத்துக்களைக் கணித்து நாங்கள் இறுதியில் ஒரு தீர்மானம் எடுப்போம். 

கேள்வி : ரீ.என்.ஏ. மைத்திரிபால சிரிசேனவுடன் ஒப்பந்தம் செய்து கொண்டது என்ற பேச்சில் உண்மையுள்ளதா? 
பதில் : அது பெரும் பொய். அவ்வாறான எந்தவொரு ஒப்பந்தமும் இல்லை.

கேள்வி : குறைந்தளவு அவருடன் அவ்வாறான பேச்சுவார்த்தையில் கூட ஈடுபடவில்லையா? 
பதில் : நாங்கள் எல்லோருடனும்தான் பேச்சுவார்த்தையில் ஈடுபடுகின்றோம். என்றாலும் எங்கள் அரசியல் நிலைப்பாடு தொடர்பில் நாங்கள் யாருடனும் இதுவரை எந்தவொரு உடன்படிக்கையும் செய்துகொள்ளவில்லை.

கேள்வி : அரசாங்கத்துடன் இதுதொடர்பில் கலந்துரையாடினீர்களா?
பதில் : தமிழ் தேசியக் கூட்டமைப்புடன் பேச்சுவார்த்தை நடாத்துவதில்லை என அரசாங்கம் தெளிவாக அறிவித்துள்ளது. அதனை அநுர பிரியதர்சன யாப்பா ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளராக பதவிப் பிரமாணம் செய்துகொண்டபோதும் அறிவித்தார். அதற்கேற்ப, அரசாங்கம் எங்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபடும் என நாங்கள் நினைக்கவில்லை.

கேள்வி : சம்பந்தன் இந்தியாவுக்குச் சென்றதற்கான காரணம் ஜனாதிபதித் தேர்தலின்போது என்ன செய்ய வேண்டும் என்பது பற்றி கலந்தாலோசிப்பதற்காகவே ஆகும் எனவும் ஒரு பேச்சு அடிபடுகின்றதே. அது உண்மையா?

பதில் : இல்லை. இல்லவே இல்லை. சம்பந்தன் ஒவ்வொரு ஆண்டின் இறுதியிலும் அவரின் வைத்திய பரிசோதனைக்காகச் செல்கின்றார். தற்போதும் அவர் வைத்தியசாலையில்தான் இருக்கின்றார்.

Monday, December 8, 2014

மகிந்தவுக்கு முடியாது என்பது....?

மகிந்தவுக்கு மூன்று முறை முடியுமா? இன்று அரசியல் வட்டாரத்தில் நிலைகொண்டுள்ள தலைப்பு இதுதான். ஜனாதிபதித் தேர்தல் போன்ற நாட்டின் தலையெழுத்தை தீர்மானிக்க வேண்டிய காலப்பகுதியில் ஏற்பட வேண்டிய கொள்கைகள், எதிர்கால நோக்கு முதலியன பற்றி கடந்த சில மாதங்களாக பேச்சுக்கள் அடிபடுகின்றன. முக்கியமாக சென்ற ஜனாதிபதித் தேர்தலின்போது அரசியலில் புதுமுகமாக இணைந்துகொண்ட சரத் பொன்சேக்கா “பொது வேட்பாளர்” பலகை தொங்கவிடப்பட்டு அரசியலுக்குள் தள்ளிவிடப்பட்டார். அந்த அரசியல் விகாரத்தின் மற்றொரு தொடர்ச்சியாக “மும்முறை முடியாது” என்ற நீளமான பேச்சு சப்பை போடு போட்டுள்ளது ஆச்சரியமானதன்று!


சிலர் மேற்கத்தேயத்தின் தீமைகளைச் சொல்லிக் கொண்டிருக்க, மற்றும் சிலர் மேற்கத்தேயத்தைப் போற்றிப் புகழ்ந்து கொண்டிருக்க மேற்கத்தேயத்திலோ இவ்வாறான விடயங்களைக் காணவியலாது. முக்கியமாக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற நாடுகளில் இவ்வாறான வரலாற்று முக்கியத்துவம் மிக்க தேர்தல் ஒன்றின்போது அந்நாடுகள் முக்கியத்துவம் கொடுப்பது நாட்டில் வளர்ச்சி பற்றிய தூரநோக்கிற்கே. அவ்வாறான்றி இவ்வாறான சில்லறைப் பிரச்சினைகள் பற்றி துளியும் கருத்திற் கொள்ளாது. ஊடகங்களும் அதனோடு ஒட்டிய ஏனைய துறைகளும் நாட்டின் எதிர்காலம் பற்றி தூரநோக்கையே தங்களது பிரதான செய்திகளாகக் கொள்ளும். பெரும்பாலும் இவ்வாறு இடையில் சொருகிக் கொண்ட தலைப்புக்களுக்குப் பதிலாக பொருளாதார நிலை, பாதுகாப்பு, கல்வி, சுகாதாரம், வெளிநாட்டுத் தொடர்புகள் போன்ற துறைகளுக்கு முக்கியத்துவம் அளிப்பதை சுட்டிக் காட்டவியலும்.

என்றாலும் துரதிர்ஷ்டவசமாக எங்களில் எவரோ வடிவமைத்துத் தருகின்ற ஒரு குறித்த நேரத்திற்கு மாத்திரம் பொருந்துகின்ற தலைப்பில் நாங்கள் சிறைப்பட்டிருக்கின்றோம்.


சரத் என் சில்வாவின் வாதம்



(தொடரும்... இணைந்திருங்கள்)
தமிழில் - கலைமகன் பைரூஸ்

Friday, November 28, 2014

ஊடக சுதந்திர ஆர்.கே.டப்ளியூ அறிக்கையிலிருந்து ஜனாதிபதித் தேர்தலுக்கு...

இலங்கையின் முன்னணி வழக்கறிஞர்களில் ஒருவராகவிருந்த ஆர்.கே.டப்ளியூ. குணசேக்கர சென்ற புதன்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டார்.

சுதந்திர ஊடகங்கள் வாயிலாக அன்னார் நன்கு பிரபல்யப்படுத்தப்பட்டார். உண்மையில் அவர் இலங்கையின் ஊடக சுதந்திரத்தை முழுமைப்படுத்துவான் வேண்டி, பல்வேறு நடவடிக்கைகளை முன்னெடுத்தவர்.

ஆர்.கே.டப்ளியூ. குணசேகர கமிட்டியின் அறிக்கை எனும் பெயரில் இலங்கையின் அரசியல் அகராதியிர் உள்ள சட்ட மறுசீரமைப்புத் தொடர்பிலான அறிக்கை 1996 இலிருந்து  இன்றுவரை காணப்படுகின்ற முக்கிய அறிக்கையாகும்.

1994 ஆம் ஆண்டு ஆட்சியில் அமர்ந்த சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க அரசாங்கத்தின் மிக முக்கிய செயற்பாடுகளில் ஒன்றாக ஊடக சுதந்திரத்தை முழுமைப்படுத்துவதற்காக நான்கு முக்கிய கமிட்டிகள் நியமிக்கப்பட்டது.

இந்த நான்கு கமிட்டிகளினாலும் முன்வைக்கப்பட்ட அறிக்கை, சந்திரிக்கா குமாரதுங்க அரசினாலோ, ரணில் விக்கிரமசிங்க அரசினாலே, மகிந்த ராஜபக்ஷவின் அரசினாலோ (1996 ஆம் ஆண்டு முதல் பதவிக்கு வந்த எந்தவொரு அரசினாலும்) ஏறிட்டும் பார்க்கப்படவில்லை. உத்தியோகபூர்வமாக அது அறிவிக்கப்படவுமில்லை. நான்கு கமிட்டிகளினதும் முக்கிய பிரிவாகிய ஊடக சுதந்திரத்திற்கு ஏற்புடையதான சட்ட மீளமைப்பிற்கான கமிட்டியின் முக்கிய பொறுப்பை ஆர்.கே.டப்ளியூ. குணசேக்கரவே ஏற்றார். இலங்கையின் பிரபல்யம்மிக்க மனித உரிமைகள் தொடர்பான எழுத்தாளரும் வழக்கறிஞருமான கிஷாலி பின்தோ ஜயவர்த்தன இதுபற்றிக் குறிப்பிடும்போது, இவ்வறிக்கையானது “இலங்கை ஊடக மறுசீரமைப்புத் தலைமைத்துவத்தின் ஆரம்பம்” என்று குறிப்பிட்டுள்ளார். மேலும் அவர் குறிப்பிடும் போது “ ஊடகத்துறையுடன் தொடர்புடைய அனைத்துடனும் தொடர்புற்றது”  எனவும் குறிப்பிட்டுள்ளார்.

(தொடரும்...)

Monday, October 6, 2014

இலங்கையில் செயற்படும் முஸ்லிம் அடிப்படைவாதக் குழுக்கள் எவை ..? தௌஹீத் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி, தப்லீக் ஜமாஅத் – லக்பிம கட்டுரையில் சுட்டிக்காட்டு

லக்பிம-சிங்களத்தில் – சஞ்ஜய நல்லபெரும (සංජය නල්ලපෙරුම) தமிழில் – கலைமகன் பைரூஸ் லக்பிம சிங்கள கட்டுரை ஒரு புரிதலுக்காக :
பேருவலை, அளுத்கம நிகழ்வுடன் தொடர்புடைய விசாரணைகள் இன்னும்முடிவுக்கு வரவில்லை. இந்நிகழ்வோடு மீண்டும் களத்தில் இறங்கியுள்ள அடுத்த பிரச்சினை அடிப்படைவாத அமைப்புக்கள் இலங்கையில்செயற்படுகின்றது என்ற கருதுகோளாகும். பொதுபல சேனா அமைப்பு அடிப்படைவாத அமைப்பு என முஸ்லிம் அமைப்பொன்றுதான் சுட்டிக் காட்டியது. அத்தோடு சிலர் பொதுபல சேனா அமைப்பு உட்பட பௌத்த அமைப்புக்கள் பலவற்றை அடிப்படைவாத அமைப்புக்கள் என விரல் நீட்டுகின்றன.
பொதுபல சேனா அமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார் சில வருடங்களாக இலங்கையில் முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பு இரகசியமாக இயங்கிவருவதாகக் குற்றம் சாட்டிவருகின்றார். சில வருடங்களுக்கு முன்னர் சர்வதேச பொலிஸார் இலங்கை தொடர்பில் வெளியிட்ட கருத்தை அடிப்படையாக வைத்தே அவர் அவ்வாறு கூறுகின்றார். இலங்கையில் அடிப்படைவாத அமைப்பு இயங்கி வருவதாக சர்வதேச பொலிஸ் இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தது. ஞானசாரர் இதுபற்றிக் குறிப்பிடும்போது, இலங்கையில் அடிப்படைவாத அமைப்பு இயங்குகின்றது என்பதற்கு தகுந்த சாட்சி இதுவாகும் எனக் குறிப்பிடுகின்றார்.
“அடிப்படைவாத அமைப்புக்களின் செயற்பாடுகள் இவைதான் என எங்களுக்கு தெளிவுறுத்த முடியுமாவது எவ்வாறென்றால், இந்தப் பகுதியில் நடைபெறும் நிகழ்வுகளை அதனுடன் ஒப்பிட்டுப்பார்க்கும் போது மட்டுமே. சர்வதேச பொலிஸால் முன்வைக்கப்பட்டுள்ள காரணங்களை அடிப்படையாக வைத்துப் பார்க்கும் போதும் அது தெட்டத் தெளிவாகின்றது. ஜிஹாத் கருதுகோளுடன் செயற்படுகின்ற வஹாபிஸ மத வாத அமைப்பு தற்போது நாடெங்கிலும் செயற்பட்டு வருகின்றது” என ஞானசாரர் குறிப்பிடுகிறார்.
ஞானசாரரின் விரல்கள் உயர்வது தௌஹீத் ஜமாஅத், ஜமாஅத்தே இஸ்லாமி, இஹ்வான் முஸ்லிம் போன்ற அமைப்புக்களை நோக்கியே. இவ்வமைப்புக்களின் அங்கத்தவர்கள் வெவ்வேறு முஸ்லிம் நாடுகளில் பயிற்சி பெற்று இலங்கைக்கு வந்துள்ளதாகவும், முஸ்லிம் சமுதாயத்தை அவர்களின் பிடிக்குள் சிக்கவைப்பதற்காக பல்வேறு திட்டங்கள் தீட்டப்படுகின்றன எனவும் ஞானசாரர் குற்றம் சுமத்துகின்றார். அதற்காக பல்வேறு நாடுகளிலிருந்தும் பணம் திரட்டப்படுவதாகவும், இலங்கையை முஸ்லிம் நாடாக மாற்ற வேண்டும் எனும் குறிக்கோள் உடையவர்களாக அவர்கள் இருப்பதாகவும் தேரர் தெளிவுறுத்துகின்றார்.
gana 2
இதேவேளை, ஜாதிக்க ஹெல உறுமயவும் பொதுபல சேனாவின் கருத்தினை ஒத்த கருத்தையே முன்வைக்கின்றது. எல்.ரீ.ரீ.ஈ அமைப்பு தோல்வியைத் தழுவிய பின்னர் முஸ்லிம் சமுதாயத்திலிருந்து முஸ்லிம் அடிப்படைவாத இயக்கம் தோன்றியுள்ளதாக அவ்விரு அமைப்புக்களும் ஒருமித்துக் கூறுகின்றன. ஏறத்தாள பதினைந்து இருபது ஆண்டுகளுக்கு முன்னர் முஸ்லிம்களிடமிருந்த நல்ல செயற்பாடுகள் பல மாற்றமடைந்துள்ளதாகவும், அறாபியர்களைப் போல ஆடை ஆபரணங்கள் கூட மாற்றமடைந்துள்ளதாகவும் ஜாத்திக்க ஹெல உறுமய குறிப்பிடுகின்றது.
அதற்கான காரணம் அடிப்படைவாதத்தின் தலையீடே எனவும் குற்றம் சாட்டுகின்றது ஹெல உறுமய. இலங்கையிலிருந்து விலகியிருக்கின்ற ஒரு குழுவாகவே இந்த அடிப்படைவாத அமைப்பு செயற்படுவதாகவும், இதனால் சமுதாயத்தில் பாரிய பிரிவினை ஏற்பட்டுள்ளதாகவும் ஹெல உறுமய தெளிவுறுத்துகின்றது. அவ்வாறு சமூகத்தில் ஏற்பட்டுள்ள பிளவு ஏக காலத்தில் பிரிவினைவாதத்தின்பால் தள்ளக்கூடிய சாத்தியக்கூறுகள் உள்ளன என்பதில் அசையாத நம்பிக்கை இருப்பதாகவும் ஹெல உறுமய கூறுகின்றது.
“முஸ்லிம் சமூகத்தில் இதற்கு முன்னர் முஸ்லிம் அரசியல் தலைவர்களே இருந்தார்கள். இந்த முஸ்லிம் தலைவர்கள்தான் முஸ்லிம் சமூகத்திற்கு ஒவ்வொன்றையும் திணித்தார்கள். அன்று அஷ்ரஃப் இருந்தார். இன்று ஹக்கீம், ரிஷாத் பதியுத்தீன், அஸாத் ஸாலி போன்ற அரசியல் தலைவர்கள் இருக்கின்றார்கள். என்றாலும், இன்று அரசியல் தலைவர்களால் சமுதாயத்திற்குள்ள தலையீடு மிகக் குறைவு. இன்று அதற்குப் பதிலாக முஸ்லிம் சமுதாயத்தில் இன்று அதிகம் தலையிடுவது அடிப்படைவாத மத அமைப்பே. இவ்வமைப்புக்களில் இருப்பவர்கள் யார் என்பது பற்றி எங்கள் யாருக்கும் தெரியாது. அதன் தலைவர்கள் பற்றி இரகசியம் காக்கப்படுகின்றது. ” என ஜாத்திக ஹெல உறுமயவின் பிரச்சாரச் செயலாளர் நிஷாந்த ஸ்ரீ வர்ணசிங்க குற்றம் சாட்டுகின்றார்.
சென்ற சில வாரங்களுக்கு முன்னர் பொதுபல சேனாவுடன் பிரச்சினையை ஏற்படுத்திக் கொண்டவர்களும் இந்த அடிப்படைவாதிகளே. அது பாரிய அளவில் கிழக்கு மாகாணத்தில் செயற்படுவதாகவும், அதற்கு அடுத்ததாக புத்தளம், பேருவலை போன்ற இடங்களை மத்திய நிலையங்களாகக் கொண்டு அது இயங்குவதாகவும் வர்ணசிங்க தெளிவுறுத்துகின்றார்.
“இந்த அடிப்படைவாத அமைப்பானது அவர்களுக்குக் கிடைக்கும் பணத் தொகையுடனேயே இயங்குகின்றது. இந்த அடிப்படைவாதிகளுக்கு வெளிநாட்டு உதவி மடைதிறந்து கொண்டு வருகின்றது. அதேபோல, தற்போது சரணாகதிகளாக சிலர் இலங்கைக்கு வருகை தந்துள்ளனர். பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் போன்ற நாடுகளிலிருந்து சிலர் வெளிநாடுகளிலுள்ளவர்களுடன் தொடர்புகளை ஏற்படுத்திக் கொண்டுள்ளனர். அவர்கள் நாட்டின் பாதுகாப்புக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் செயற்படுகின்றார்கள். இண்டர்போல் எனும் சர்வதேச பொலிஸ் குறிப்பிடுவது போல, அவர்கள் இலங்கையை ஒரு மத்திய நிலையமாகக் கொண்டு செயற்படுகின்றார்கள். இலங்கையை அவர்களின் பாதுகாப்பிடமாக்க் கொண்டுள்ள அவர்கள் நிசாப்தமாக தங்கள் கருமத்தைச் சரிவரச் செய்துகொண்டு செல்கிறார்கள்.
தப்லீக் ஜமாஅத்தினர் கிழக்கு மாகாண பல்கலைக்கழத்திற்கு புதிதாக வந்து சேர்ந்த 800 மேற்பட்ட முஸ்லிம் மாணவர்களுக்கு, ஏனைய மதத்தவர்களுடன் ஒன்றிணைந்து செயற்படக் கூடாது எனக் கட்டளையிட்டுள்ளது. இந்த அமைப்பானது இஸ்லாமிய சரீஆவுக்கு உட்பட்டு தனது பணியைச் செய்கின்றதா என அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையும் பார்க்காமல் இருக்கின்றது. இது கவலைக்கிடமான விடயமாகும்” எனவும் வர்ணசிங்க மேலும் குற்றம் சுமத்துகின்றார்.
இந்த அடிப்படைவாத அமைப்பு சமுதாயத்தின் இருப்புக்கும் நல்வாழ்வுக்கும் அச்சுறுத்தலாக இருப்பதால் அவை தடை செய்யப்பட வேண்டும் எனவும், இது தொடர்பில் அரசாங்கமும், புலனாய்வுப் பிரிவினரும் ஆராய்வது கடமை எனவும் அவர் தெளிவுறுத்துகின்றார்.
“இவ்வமைப்புக்களின் செயற்பாடுகள் நாட்டுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். அதனால்தான் அவற்றைத் தடைசெய்யுமாறு நாங்கள் கோருகின்றோம்.” என கலகொடஅத்தே ஞானசாரர் குறிப்பிட்டுள்ளார். “இந்த அடிப்படைவாத அமைப்பு மிகவும் சூட்சுமமாக செயற்படுகின்றது. இது தொடர்பில் நாங்கள் மிகவும் அகிம்சை வழியில் சுட்டிக் காட்டும்போது, சிலர் எங்களுக்கு அடிப்படைவாதிகள் நீங்கள்தான் என முத்திரை குத்துகின்றார்கள். ஆயினும் அவர்கள் இந்த அடிப்படைவாதிகளுக்கு எதிராக செயற்படுவதில்லை. இந்தப் பிரச்சினையானது இன்னும் பூதகரமாக மாறுவதற்கு முன் இது தொடர்பில் நாங்கள் சொல்வது பற்றி சீர்தூக்கிப் பார்க்க வேண்டும். இந்த “ஹாமுதுரு” சொல்வது உண்மையா பொய்யா என தேடிப் பார்க்க வேண்டும்”
பொதுபல சேனாவினால் முன்வைக்கப்பட்டுள்ள இக்கருத்துக்கள் தொடர்பில் சிறிதளவாகவேனும் இன்று பொறுப்புச் சொல்லவேண்டியவர்கள் செயற்படுகின்றார்கள் எனவும் ஞானசார குறிப்பிடுகிறார்.
பொதுபல சேனா உள்ளிட்ட இன்னும் சில அமைப்புக்கள் இந்த அடிப்படைவாதிகளுக்கு எதிராக செயற்படும் போது, சிலர் பொதுபல சேனாவின் பக்கமும் விரல் நீட்டுவதற்கான காரணம் அதுவும் ஒரு அடிப்படைவாத அமைப்பு என்று குற்றம் சுமத்தியே. பொதுமக்களை உசுப்பேற்றி பொதுபல சேனா அடிப்படைவாத அமைப்பாக செயற்படுவதாக குற்றம் சுமத்துகின்றார் மத்திய மாகாண சபை உறுப்பினர் அஸாத் ஸாலி. அளுத்கம, பேருவலை நிகழ்வில் சிங்கள மக்கள் வெகுண்டெழக் கூடிய முறையில் செயற்பட்ட பொதுபல சேனா அடிப்படைவாத அமைப்பு என அவர் குற்றம் சுமத்துகின்றார்.
பொதுபல சேனாவின் குற்றச்சாட்டுக்கு உள்ளாகின்ற தௌஹீத் ஜமாஅத் அமைப்பின் செயலாளர் அப்துல் ராஸிக் என்பவரிடமும் நாங்கள் இது தொடர்பில் வினவினோம். தங்களது அமைப்பு அகிம்சைவாத அமைப்பு என அவர் பதிலளித்தார். இரத்தம் வழங்கும் முகாமினை நடாத்தும் நாம், சமூக சேவைகளில் ஈடுபடுகின்ற நாம் அரசாங்கத்திற்கு எதிராக ஒருபோதும் செயற்படுவதில்லை என குறிப்பிட்டார். என்றாலும், முஸ்லிம் பள்ளிகளில் பொதுமக்களுக்கு உபதேசிக்கின்ற விடயங்களை விடவும் வித்தியாசமான முறையில் தாங்கள் பொதுமக்களுக்கு உபதேசிப்பதாக அவர் ஏற்றுக் கொண்டார். தற்போதுள்ள இஸ்லாம் பரிசுத்தமான கொள்கையுடையது அல்ல எனவும், கால மாற்றத்திற்கேற்ப மாறிவந்த நவீன புதுமைகள் புகுந்துள்ளன எனவும் குறிப்பிடுகின்ற அவர், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய பரிசுத்த மார்க்கத்தின்பால் தாங்கள் செல்வதாகவும் குறிப்பிட்டார். ஆயினும், நாட்டிலுள்ள சட்டத்திற்கு குந்தகம் விளைவிக்கக் கூடிய எந்தவொரு நடவடிக்கையையும் தாங்கள் ஒருபோதும் மேற்கொள்வதில்லை எனவும் தெளிவுறுத்தினார்.
நாட்டின் பாதுகாப்புக்கு, சமாதானத்திற்கு சவாலாக முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பு செயற்படுவதாயின் அது தொடர்பில் சட்டரீதியாக முறைப்பாடுகள் ஏதேனும் குறித்த நிறுவனங்களுக்கு அனுப்பிவைத்திருக்கின்றீர்களா? என பொதுபல சேனா அமைப்பிடம் வினவினோம். பொதுபல சேனா பொலிஸிற்குச் சென்று வேறாக முறைப்பாடு செய்யாதவிடத்தும், தேவையான இடங்களுக்கு சென்று, அதுதொடர்பில் தெளிவுறுத்தியுள்ளதாக ஞானசாரர் குறிப்பிட்டார். பொலிஸ் மா அதிபர் மற்றும் இராணுவத் தளபதி ஆகியோரைச் சந்தித்து இதுதொடர்பில் உரையாடி அவர்களின் பார்வையை இப்பக்கம் திருப்பியுள்ளேன் எனக் கூறினார். தேசிய பாதுகாப்புக்கு பங்கம் விளைவிக்கக்கூடிய இந்த அடிப்படைவாத அமைப்புப் பற்றி செயற்படும்போது, முறைப்பாடுகள் வரும்வரை பார்த்திருக்க வேண்டிய தேவை இல்லை எனவும் ஞானசாரர் குறிப்பிடுகிறார்.
பொதுபல சேனா வேறாக முறைப்பாடு செய்யாதவிடத்தும், மதப் பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்காக அண்மையில் ஆரம்பிக்கப்பட்ட விசேட பொலிஸ் பிரிவுக்கு மத ரீதியான பிளவுகள் 64 இன் முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அடிப்படைவாத அமைப்பு பற்றிய 42 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. அது தவிர, தாக்குதல் தொடர்பிலான 22 முறைப்பாடுகள் கிடைத்துள்ளன. மத பிரச்சினைகள் தொடர்பில் ஆராய்வதற்கான விசேட பொலிஸ் பிரிவு இதுதொடர்பில் கருத்துத் தெரிவிக்கும்போது, இவற்றில் 10 முறைப்பாடுகளின் விசாரணைகள் முடிவடைந்துள்ளன எனக் குறிப்பிடுகின்றது. பௌத்த அமைப்புக்கள், தனியார் மற்றும் ஏனைய மதங்களுடன் தொடர்புடைய அமைப்புக்களிலிருந்தும், தனியாரிடமிருந்தும் இந்த முறைப்பாடுகள் கிடைத்துள்ளன.
கடந்த சில வாரங்களாக ஆரம்பமாகியுள்ள மதப் பிளவு தொடர்பில் கருத்துத் தெரிவிக்கின்ற பலரும், பொதுபல சேனா குறிப்பிடுவது போன்றதொரு முஸ்லிம் அடிப்படைவாத அமைப்பு நாட்டினுள்ளே இருக்குமாயின் அது தொடர்பில் சட்ட நடவடிக்கை எடுப்பது அரசாங்கத்தின் பொறுப்பாகும் என்றுதான் கூறுகின்றார்கள். அப்போது ஏனைய அமைப்புக்களின் சட்டத்தை கையில் எடுத்து செயற்படாமலிருக்குமான என தர்க்கிக்க இடமுள்ளதாகவும் அவர்கள் குறிப்பிடுகிறார்கள். இந்த தர்க்கம் தொடர்பில் அரசாங்கத்தின் கருத்தைத் தெரிந்துகொள்வதற்காக நாங்கள் ஊடகத்துறை அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்லவிடம் வினா தொடுத்தோம்.
பொதுபல சேனா என்பதும் இன்னொரு அமைப்பு என்பதால் அவர்கள் சொல்வது போல அரசாங்கத்திற்கு ஆட முடியாது என அவர் குறிப்பிட்டார். அவர் மேலும் குறிப்பிடுகையில் பொதுபல சேனா அமைப்பின் கருத்துக்களை மட்டும் ஏற்றுக் கொள்ள முடியாது. ஏனைய மத அமைப்புக்களின் கருத்துக்களையும் கருத்திற்கொள்ள வேண்டும் எனக் குறிப்பிட்டார்.
அவ்வாறே, இதுதொடர்பில் மகாநாயக்க தேரர்களின் என்னதான் சொல்கிறார்கள் என்பதையும் நாம் கவனிக்க வேண்டும். தற்போது இந்த விடயங்கள் ஒவ்வொரு நிகழ்வுகளின் அடிப்படையிலேயே முன்வைக்கப்படுகின்றது. இனி அவ்வாறான நிகழ்வுகள் இடம்பெறும்போது அது தொடர்பில் விசாரணை நடாத்துமாறு குறித்த பிரிவுகளுக்கு நாங்கள் ஆலோசனை வழங்குகின்றோம். அது தொடர்பில் பரிசீலிக்கப்படுகின்றன. இது தொடர்பில் அரசாங்கம் மௌனியாக இருக்கின்றது என்று மட்டும் சொல்லவியலாது. அடுத்தது, அரசாங்கம் ஒருபோதும் அடிப்படைவாதத்திற்கு இடமளிக்காது எனவும் உறுதியாகச் சொல்லிக் கொள்ள வேண்டும்” எனவும் அமைச்சர் கெஹெலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டார்.
நன்றி – லக்பிம
சிங்களத்தில் – சஞ்ஜய நல்லபெரும (සංජය නල්ලපෙරුම)
தமிழில் – கலைமகன் பைரூஸ்

Tuesday, September 30, 2014

வாக்குகளில் அரைக்கோடி சிங்கள பௌத்தர்களுக்காக குரல்கொடுப்பவருக்கே! – ஞானசார

வாக்குகளில் அரைக்கோடி அடுத்துவரும் ஜனாதிபதித் தேர்தலில் சிங்கள பௌத்தர்களுக்காக குரல்கொடுப்பதற்கு முன்வரும் வேட்பாளருக்குப் பெற்றுக்கொடுப்பதற்கு தயார் என பொதுபல சேனா அமைப்பு குறிப்பிட்டுள்ளது.

அவ்வமைப்பின் பொதுச் செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் கொழும்பில் நேற்று நடைபெற்ற பொதுபல சேனா மாநாட்டிடல் குறிப்பிட்டுள்ளார்.

தமது அமைப்பு நாடளாவிய ரீதியாக உள்ள 5000 கோயில்களிலிருந்து 50 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக் கொள்வதற்குத் தேவையான நடவடிக்கையை ஆரம்பிக்கவுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

“கட்சி அரசியலின் மூலம் தகர்த்தெறியப்பட்டுள்ள இனத்தை மீண்டும் ஒருமுறை நிமிர்த்த வேண்டிய தேவைப்பாடு உள்ளது. அதனைத் தங்களால் செய்ய முடியாது விட்டால் அந்த தலைமைப் பதவியைத் நாங்கள் தருவதற்குத் தயாராகவுள்ளோம். மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க யாராகவும் இருந்துவிட்டுப் போகலாம். அவர்களை ஆட்சிபீடத்திற்கு அமர்த்தும் சக்தி எங்களிடமே உள்ளது.

இதுவரை காலமும் நடைமுறையில் இருந்து திருட்டு, கையாலாகாத அரசியல் முறையை நாங்கள் மாற்றியமைப்போம்.. நீல நிற, பச்சை நிற, சிவப்பு நிறக் கண்ணாடிகளைக் கழற்றி எறிந்துவிட்டு பௌத்த கொடியை மட்டுமே கைகளில் ஏந்த வேண்டும். சிங்கள பௌத்த நாட்டை இந்நாட்டில் கட்டியெழுப்பவே நாங்கள் அயராது பாடுபடுகின்றோம்.

மகிந்த ராஜபக்ஷ, ரணில் விக்கிரமசிங்க, அநுரகுமார திசாநாயக்க எல்லோரும் எழுங்கள்… சிங்கள பௌத்தர்களுக்கு இழைக்கப்பட்டுள்ள அநியாயங்களைத் திரும்பிப் பாருங்கள்… கட்சிகளாகப் பிரிந்து இருந்தது போதும்… எங்கள் தலைவர் டீ.எஸ்.சேனாநாயக்க அல்ல.. பண்டாரநாயக்க அல்ல… கார்ள் மாக்ஸ், லெனின் அல்ல.. எங்கள் தலைவர் புத்த பெருமானே. நாங்கள் நாட்டை மாற்றியமைக்கத் தயாராகவுள்ளோம்..

தயவுசெய்து நீங்கள் மாறுங்கள்.. முடியாதுவிட்டால் நாங்கள் அதற்கும் தயார்…இலங்கையில் 25,287 கிராமங்கள் உள்ளன. அந்த எல்லாக் கிராமங்களிலும் ஒவ்வொரு கோயில்கள் இருந்தபோதும் 12,000 கோயில்கள் மட்டுமே பதிவுசெய்யப்பட்டுள்ளன. இவற்றில் பௌத்த கொள்கைக்கு ஏற்றாற்போல செயற்படுவன 5000 அளவில் உண்டு. ஒவ்வொரு கோயிலிலிருந்தும் சிங்கள பௌத்தர்கள் 1000 வீதம் 50 இலட்சம் வாக்குகளைப் பெற்றுக்கொள்ள இயலும். யாருக்குத்தான் வெற்றி என்பதைப் பார்த்துக் கொள்வோம்.. இந்த மாற்றத்தை நாங்கள் செய்வோம். தலைவனில்லாத இனத்திற்கு நாங்கள் தலைமைத்துவம் ஒன்றைப் பெறுவோம். அதனை எங்களால் மட்டுந்தான் செய்யவியலும்.

தலைவன் இல்லாத நாட்டுக்கு, இனத்திற்கு பௌத்த சக்தியின் மூலம் பொறுப்புச் சொல்லக்கூடிய, வரலாற்றுப் பாரம்பரியம்மிக்க உரிமைகளைப் பாதுகாக்கும் தலைவனைப் பெற்றுக் கொடுக்கும் பொறுப்பு எங்கள்மீது சுமத்தப்பட்டுள்ளது. இன்று முழுச் சமுதாயமும் நோய்வாய்ப்பட்டுள்ளது. தர்மாசனத்தைப் போலவே சிம்மாசனத்தையும் எங்களால் சரிசெய்ய முடியும் என்பதை நினைவுறுத்த விரும்புகின்றோம்…”

-கலைமகன் பைரூஸ்


திலீபன்!



இலங்கையில் சிங்கள மொழியில் எழுதும் கவிஞராகவும், எழுத்தாளராகவும்,ஊடகவியலாளராகவும் அறியப்பட்டிருக்கும் கசுன் மஹேந்திர ஹீனடிகல திலீபன் பற்றி எழுதியுள்ள கவிதை .....

புன்னகைக்கும் இதயம்
கண்ணீர்த் துளியைப் பற்றிக் கொள்ளும்
அழத் தோன்றும் முகத் தோற்றம்
நேசத்தை யாசிக்கும்
யதார்த்தத்தைக் கனவோடு பிணைத்து
இலக்குகளுக்காகத் தரித்து நின்ற திலீபன் !
திலீபன் ! காற்றில் உதித்தவன் !
நெஞ்சங்களில்
அநேகமானவற்றை விட்டுச் சென்ற
முற்றுப் புள்ளிகளுடனான நிலத்தில்
ஒரு ‘கமா’வாக மறைந்த
விலைமதிப்பற்ற யௌவனத்தை
கோரிக்கைகளுக்காக ஈடு வைத்த
நேர்மையான புன்னகையும்
தாயன்பின் மிருதுவான குணமும் கொண்டவன்
அன்றிலிருந்து இன்று வரை
கண்ணீர் ருசிக்கும் அன்னையர்
கைகளிலில்லா ஐவிரல்களையும்
தேடியலையும் தந்தையர்
ஒன்றின் மீதொன்றாக அடுக்கப்பட்டிருக்கும்
புதல்வர்களின் சடலங்களின் மீது
ஓலமிட்டழுபவர்கள்
எல்லா இடங்களிலிலும்
இருக்கிறார்கள் திலீபன்
எரியும் விளக்கின் சுடரின்
கதைகளைக் கேட்கும் இருளும்
‘பொறுமையை மாத்திரமே கைக்கொள்வோம்’
என்றே முனகும்
உருவாக்கப்பட்ட நாடகக் கோமாளிகள்
விலகிச் செல்லும் கூடமும்
‘உண்ணாவிரதம் இருப்பது
எப்படியெனக் காட்டுகிறேன்’ எனக் கூறி
மீண்டும் திலீபனுடன் அமைதியாகும்
நல்லூர் வானம் எனப்படுவது
வெடிப்புற்ற பூமியென அறிந்து
சூரிய, சந்திரர்களை விடவும்
கருமுகில்கள் அணி திரளும்
வாழ்க்கையில் சிறந்தவற்றை
கோணலாகிய தினங்களிடையே ஒளித்து
சுவாசத்தை உடைத்துடைத்துப் பகிர்ந்து
இதயத் துடிப்பு உறைந்ததோ திலீபன் அண்ணா…

- கசுன் மஹேந்திர ஹீனடிகல
தமிழில் – எம்.ரிஷான் ஷெரீப்

Tuesday, August 26, 2014

முஸ்லிம் அடிப்படைவாதிகளுக்கு பம்மாத்து வாங்கும் சிங்கள முகமூடிகள்…!

முஸ்லிம் பிரச்சினை தொடர்பில் இதற்கு முன்னொரு போதும் இல்லாத அரசியல் பிரச்சினை தற்போது நாட்டில் முளைத்தெழுந்துள்ளது. அளுத்கமவில் நிகழ்ந்த துரதிர்ஷ்டவசமான இனவாதப் பிரச்சினையும் அந்தப் பிரச்சினையின் ஒரு கெட்ட செய்தியே. அத்துடன் தற்போது அந்தப் பிரச்சினையானது பல்வேறு விதத்திலும் சமூக அரசியல் பேச்சுவார்த்தைகளுக்கு தீனி போட்டுக் கொண்டிருக்கின்றது. இந்நாட்டு இலக்கிய, கலாநிலையங்கள் கூட இதுதொடர்பில் முஸ்லிம்களின் பிரச்சினை தொடர்பில் பல்வேறு கருத்துக்களை முன்வைத்து நிற்கின்றன. அளுத்கம பிரச்சினையானது சர்வதேசத்திற்கு பாரிய தலைப்பாக இல்லாதபோதும் இந்நாட்டில் மாற்றுக் கருத்துடையோராக இருந்தோருக்கு பாரிய இனிப்பாகவும், பல்வேறு தேடல்களின் பால் செல்வதற்கு வழிசமைப்பதாகவும் அமைந்துள்ளது. இந்தக் கட்டுரையை எழுவதன் நோக்கம் முஸ்லிம்களின் பிரச்சினைகள் பற்றி அலசுவதற்காக அல்ல. இப்பிரச்சினையை வைத்துக்கொண்டு, பல ஆண்டுகளாக மாற்றுக்கருத்துடன் மற்றவர்களின் பிரச்சினைகளைக் கண்டு குளிர்காய நினைப்பவர்கள் பற்றி…. அவர்களிடத்து இருக்கின்ற மாற்றுச் சிந்தனைகள் பற்றி வாசகர்கள் அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே இக்கட்டுரை எழுதப்படுகின்றது.


பிரச்சினையின் பின்னணி


மத, தேசிய எல்லையை ஒருபக்கம் நிறுத்திவிட்டு, ஒருபக்கம் சாராமல் மனிதத்துவத்துடன் எடுத்துநோக்கும்போது, பௌத்த கலாசாரம், இஸ்லாமிய கலாசாரத்துடன் ஒத்துப்போகின்ற உலகத்தால் பெரும்பாலும் விரும்பப்படுகின்ற, ஒத்துழைப்பு நல்குகின்ற ஒன்றாகும். அதுவே தெளிவான உண்மையாகும். மாறாக ஏனைய கலாசாரங்களை தப்பெண்ணத்துடன் நோக்கும் தன்மையுடையதன்று. இஸ்லாம் என்பது இயல்பாகவே அடிப்படைவாதத்திற்கு பெரும் பங்களிப்பு நல்குகின்ற, சிந்திப்பதற்கு சிறிதாக இடமளிக்கின்ற, மாற்றங்களுக்கு இலகுவில் இடமளிக்காத ஆக்கிரமிப்புடன் கூடிய கட்டுப்பாடுமிக்கது. என்றாலும் அதனைக் கேட்டவுடனே கலாசார பாரம்பரியம்மிக்க பல நூற்றாண்டுகள் ஒற்றுமையாக வாழ்ந்த சகோதர முஸ்லிம்களுக்கு எதிராக யாராலும் செயற்பட இயலாது.  அவர்களின் சுதந்திர இருப்பை எல்லோரும் ஏற்றுக்கொள்ளத்தான் செய்வர். என்றாலும், பல்கூட்டு உலகில் வாழுங்கால் பொதுநலனுக்காக தங்களது கலாசார ஈர்ப்பினை சற்றுத் தளர்த்திக் கொள்வது எந்தவொரு இனத்தினதும் மதத்தினதும் கடமையாகும் என்பதை மனதிற் கொள்ள வேண்டும்.  முஸ்லிம் புத்திஜீவிகள் செய்ய வேண்டிய சரியான வழிமுறை ஏதென்றால், தங்கள் மத விழுமியங்களுக்கும் காலத்திற்கும் ஏற்ப நவீன உலகிற்கு ஏற்ப அர்த்தபுஷ்டியான புதுவிடயங்களை எடுத்துரைக்க வேண்டும். அனைவருக்கும் நன்மை பயக்கின்ற மாற்றுக்கருத்துக்களுக்கு முகங்கொடுக்க முடியுமான முறையிலான அவ்வாறான உள்நுழைவு இஸ்லாமியர்களுக்கு இன்று தேவைப்பாடாகவுள்ளது. 


ஆயினும் இன்று உலகில் நாங்கள் சந்தித்திருப்பது காலத்திற்கு தேவையானதாக அன்றி, படுபயங்கரமான அடிப்படைவாதத்தில் மூழ்கியுள்ள, பயங்கரவாத சக்தியினூடாக மதத்தைப் பரப்புகின்ற, மிலேச்சத்தனமான ஆக்கிரமிப்புடன் கூடிய இஸ்லாமே. சம்பிரதாய ரீதியிலான முஸ்லிம்கள் கூட அச்சத்திற்குள்ளாகியுள்ள இந்த ஜிஹாத் அடிப்படைவாதமானது இன்று உலகத்தையை தீப்பற்ற வைத்துக் கொண்டிருக்கின்ற படுபயங்கரமான பிரச்சினையாக இருக்கின்றது. மறுபுறத்தில் மேற்கத்தேயம் கூட இந்த பயங்கரவாத அடிப்படைவாத சக்தியை தங்கள் திட்டங்களை நிறைவேற்றிக் கொள்வதற்கு சாதமாக பயன்படுத்திவருகின்றது. தங்களது நாடுகளுடன் கைகோர்த்துக் கொள்ளாது தங்களுக்கு எதிராக இருக்கின்ற நாடுகளை குட்டிச் சுவராக்கும் நோக்கத்திற்காக இந்த ஜிஹாத் அமைப்புக்கு கைகொடுகின்றன. இன்னும் சொல்லப்போனால், பல்வேறு திட்டங்களினூடாக செயற்படுகின்ற இதன் ஒரு அங்கமாகவே இலங்கையில் தற்போது கிளர்ந்தெழுந்துள்ள சிங்கள – முஸ்லிம் பிரிவினைவாதத்தைக் காணக்கூடியதாக இருக்கின்றது. அவ்வாறன்றி இந்த சிங்கள – முஸ்லிம் பிரச்சினையை அளுத்கமவின் கலவரத்துடன் அல்லது சிங்கள மதகுருமார் பற்றிய காரமான பேச்சுடன் நிறுத்திக் கொள்ளவியலாது.

(தொடரும்... இணைந்திருங்கள்...)

Sunday, August 17, 2014

பண்டிதனாவதற்கு இலகுவழி தேரவாதத்தைத் தாக்குவதே! - பேராசிரியர் நலிந்த சில்வா


ந்தவொரு கலாச்சாரமும் ஏதேனும் ஒரு மதத்திலேயே தங்கியிருக்கின்றது. எங்கள் நாட்டின் பௌத்த கலாச்சாரம் தேரவாத பௌதத்த்தில் தங்கியுள்ளது. தற்போது இலங்கையில் நடந்திருப்பது என்னவென்றால், பண்டிதர்கள் என்று தங்களை இனங்காட்டிக் கொள்பவர்கள் தேரவாத பௌதத்தை தாக்கிக் கொண்டிருக்கின்றார்கள். இன்று பண்டிதர்களாவதற்கு மிக இலகுவழி தேரவாதத்தை தாக்குவதாகும். இன்று தேரவாதத்தை யாரேனும் ஒருவர் தாக்குதலுக்கு உள்ளாக்கினால் நாளைய நாள் அவர் பண்டிதரே. 

தேரவாதத்தையும், பௌத்த கலாச்சாரத்தையும் தாக்குகின்றவர்களின் சில ஆக்கங்கள் ஆங்கிலப் பத்திரிகைகளில் வெளிவருகின்றன. அவற்றின் சிங்கள மொழிபெயர்ப்புக்கள் கொஞ்சம் வாசகர்களை மட்டும் கொண்டுள்ள சில சிங்களப் பத்திரிகைகளில் வெளியாகின்றன.

இவர்களுக்கு மகாவம்சம் ஒவ்வாது. துட்டகைமுனு மன்னனைத் தூற்றுகிறார்கள். இவர்கள் தற்போது வெளிப்படையாக மகாநாயக்க தேர்ர்களை மட்டும்தான் விமர்சிக்காமல் இருக்கிறார்கள்.

இவர்களுக்கு சிலநேரம் சோபித்த தேரர் தேவைப்படுவார். இவர்கள் பொதுபல சேனாவை அடிப்படைவாத இயக்கமாகக் காட்டுகிறார்கள்.

சிலர் மகாவம்சம் சிங்கள பௌத்தர்களின் 4 ஆவது பிடகமாக (திரிபிடகத்தின் ஒரு பிரிவாக) இருப்பதாகச் சொல்கிறார்கள். உண்மையில் அவ்வாறில்லை.

பிரச்சினை என்னவென்றால், மகாவம்சம் இலங்கைக்கு என்னதான் கொடுத்திருக்கின்றது? என்பதுதான். அந்த இடத்திற்கு வருவதற்கு முன்னர் இலங்கையிலிருந்த சிங்கள பௌத்தம் பற்றி பேச வேண்டியுள்ளது. அது என்னவென்றால், மகிந்த தேரர் இலங்கைக்கு வருவதற்கு முன்னர் இங்கிருந்தது சிங்கள பௌத்தம். அந்த சிங்கள பௌத்தத்தில் இருந்த கலாச்சாரம் ஏனைய கலாச்சாரங்கள் அனைத்திற்கும் இடமளித்த சிறந்த கலாச்சாரம். கருணை, இரக்கம் எனும் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்ட அனைத்து கலாச்சாரங்களுக்கும் இடமளித்த கலாச்சாரம். பண்டுகாபய மன்னனின் காலப்பிரிவை எடுத்துக்கொள்ளுங்கள். சகல மதங்களையும் போசித்த அவரது காலப்பிரிவானது, முழுமையாக நீதி நிலைநாட்டப்பட்டது என்பது ஒரு புறமிருக்க, மிகவும் உயர்வான முறையில் நீதி நிலைநாட்டப்பட்டது.

இக்கால கட்டத்தில்தான் விஜயன் உள்ளிட்டோர் இலங்கைக்கு வந்தார்கள். இக்கால கட்டம் பற்றி “வரிக பூர்ணி(க்)காவ என்ற நூலில் எழுதப்பட்டுள்ளது.

மானேவே விமலரத்ன தேரர் இந்நூலில் இயக்கர்கள் (அரக்கர்கள்) குலத்தினர் பற்றிய தகவல்களைப் பெற்று, இப்போது நாங்கள் பயன்படுத்துகின்ற மொழியிலேயே எழுதியிருக்கின்றார்.

அரக்கர்களின் “கௌரான” மொழியும் கலாச்சாரமும் அன்றிருந்தது. நாங்கள் தற்போது பயன்படுத்துகின்ற தூய சொற்களும் அந்த மொழியில் இருந்தது. நாங்கள் தற்போது பயன்படுத்துகின்ற “செப்படவிஜ்ஜாவ” போன்ற சொற்கள் அந்தமொழியிலிருந்து பெறப்பட்டதாகவே கருதப்படுகின்றது. (தமிழில் “செப்படிவித்தை” என்ற சொல் இருப்பது இங்கு மனங்கொள்ளத் தக்கது.) அதேபோல, அக்கால கட்டத்தில் பயன்படுத்தப்பட்ட பெரும்பாலான சொற்கள் இன்று பயன்படுத்துகின்ற சிங்கள மொழியிலும் கலந்துள்ளன.

அந்தக் காலகட்டத்தில்தான் விஜயன் இலங்கைக்கு வருகின்றான். அப்போது இலங்கையில் பௌத்தம் இருந்தது மட்டுமன்றி, சிலர் அதில் உயர்நிலையும் அடைந்திருந்தனர். 

மகாவம்சம் ரத்னவல்லியை தேவதையாக்குகின்றது. வரலாற்றை நாங்கள் எங்கள் தேவைக்கேற்ப எழுதுகின்றோம். சென்ற பல வருடங்களின் வரலாற்றைக் கூட நாங்கள் எங்கள் தேவைக்கேற்பவே எழுதுகின்றோம்.

விஜயனின் பின்னர் இயக்க கௌராணிக கலாச்சாரத்தில் இல்லாதவை… சிறு ஆக்கிரமிப்பு ஏற்படுகின்றது. அக்காலப் பகுதியில் அதனைத் தற்பாதுகாப்பு எனவும் சொல்லலாம். அதற்கு முன்னர் பழைமையான கலாச்சாரங்கள் எதுவும் இருக்கவில்லை.

விஜயனின் பின்னர் இந்நாட்டுக் கலாச்சாரத்தில் ஏற்பட்ட மாற்றமும் முக்கியத்துவமும் அதுவே. வெளிநாட்டு ஆக்கிரமிப்புக்கள் இந்நாட்டுக்குள் வந்தபோதும் ஆட்டம்காணாது, தென்னிந்தியாவிலிருந்து எவ்வளவுதான் ஆக்கிரமிப்புக்கான தலையீடுகள் வந்தபோதும், காலிங்க மாகனிலிருந்து சேன குத்திக்க, எல்லாளன் போன்றோரின் ஆக்கிரமிப்புக்களுக்கும் நாங்கள் அசையவில்லை. அவ்வாறு அவர்களின் ஆக்கிரமிப்புக்குள் சிக்கியிருந்தால் நாங்கள் வைதீக இந்து கலாச்சாரத்திற்கு அடிமைப்பட்டிருக்கக் வேண்டியிருக்கும்.


மகிந்த தேரர் இலங்கைக்கு வருகை தந்ததன் பின்னர், அவர் கொண்டுவந்த  மூன்றாவது “சங்காயனா” பௌத்த சமயத்தில் இருந்த குறித்ததொரு வகை ஆன்மீகக் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கு இலங்கையில் இருந்த தற்பாதுகாப்பு உதவிபுரிந்தது. சொல்லும் விடயங்களுக்கும் மேலாக தற்காப்பு மிக முக்கியமானது. இந்து, கிறிஸ்தவ மதங்களைப் போல பெரும்பாலும் இல்லாவிட்டாலும் மிகச் சிறியளவில் மகிந்த தேரர் கொண்டுவந்த புத்த சமயத்தில் இந்த குணாம்சங்கள் இருந்தன. இந்து, கிறிஸ்தவ, முஸ்லிம், யூத மதங்களில் இருக்கின்ற ஆன்மீகக் கொள்கைகளுக்கும் மேலாக ஆக்கிரமிப்புத் தன்மையுள்ளது.


மகிந்த தேரர் புத்த சமயத்தை இலங்கைக்குள் கொண்டுவந்ததும் இந்தக் குணாம்சங்கள் இருந்தன. அறிவின் இலட்சணம் இருந்தது. முகங்கொடுக்க வேண்டும் என்ற குணாம்சம் இருந்தது. தர்மவாதம் உதவி புரிந்தது. விஜயனின் பின்னர் இந்த தற்காப்புக் குணாம்சம் ஏதேனும் ஒருவகையில் உதவிபுரிந்தது. மகாவம்சம் 5 ஆம் நூற்றாண்டில்தான் எழுதப்பட்டது. அப்போது கிறிஸ்தவ கலாச்சாரம் மடைதிறந்து வரத் தொடங்கியது.

மகாசேன மன்னன் சிங்கள பௌத்த மன்னனாக இருந்து மகாவிகாரையை சீர்செய்து உழுந்து பயிரிட்டார். மகாசேனனின் அரசியல் தோல்வியோடு சிங்கள பௌத்த தேரவாதம் நிலையானது. அங்கு முன்னர் இருந்த சிங்கள பௌத்த கலாச்சாரமும் ஓர் அங்கமாக இருந்தது.

சிங்கள பௌத்த கலாச்சாரத்தில் நூற்றுக்கு 75 – 80 வீதம் சிங்கள பௌத்த இலட்சணங்கள் இருந்தன. ஆக்கிரமிப்புடன் கூடிய தற்பாதுகாப்பு பண்பும் இருந்தது. தற்போது பண்டிதர்கள் போல இருப்பவர்களுக்கு அதனைச் சகிக்க முடியவில்லை.

போர்த்துக்கேயர் இலங்கையை ஆக்கிரமித்த போதும், அவர்களால் இந்த கலாச்சாரப் பண்புகளை இல்லாதொழிக்க முடியவில்லை. ஒல்லாந்தருக்கும் முடியவில்லை. ஆங்கிலேயருக்கும் முடியவில்லை.

முஸ்லிம்கள் இலங்கைக்கு 9 ஆம் நூற்றாண்டில் வந்ததாக கதையளக்கின்றார்கள். இது பச்சைப் பொய். அறபிகள் முஸ்லிம்களாவதற்கு முன்னரும் இலங்கைக்கு வந்திருக்கின்றார்கள். எகிப்திலிருந்து இலங்கைக்கு முஸ்லிம்கள் வந்திருக்கின்றார்கள்.

அவர்கள் வியாபாரம் பற்றிக் கற்றுக் கொள்வது போன்ற விடயங்களுக்காகத்தான் இலங்கைக்கு வந்திருக்கின்றார்கள். உண்மையில் இந்நாடு கல்வியில் கேந்திர நிலையமாக அன்று இருந்திருக்கின்றது… நாலந்தா, தக்ஷிலா, மற்றும் பல்கலைக் கழகங்கள் உருவாவதற்கும் முன்னர் இலங்கை கல்வியில் உயரிய இடத்தை எட்டியிருந்திருக்கின்றது. சிலர் இலங்கைக்கு வருகை தந்து இலங்கையில் குடியேறி இருக்கிறார்கள். சீனர்களும்  சேது பாலத்தன் வழியாக வணிகர்களாக இலங்கை வந்திருக்கின்றார்கள். சேது பாலத்தின் வழியில் சீனர்களும் அறாபியர்களும் பண்டமாற்றம் செய்து கொண்டது இலங்கையில்தான். இந்நாட்டுக்கு வருகைதந்த அறேபியர் அந்நாட்டிலிருந்து பெண்களை அழைத்து வரவில்லை. அவர்கள் இலங்கைப் பெண்களைத்தான் திருமணம் செய்துகொண்டார்கள். அவர்கள் சிங்கள மொழியைக் கற்றுக் கொண்டார்கள். அவர்களின் பாட்டிமாரும், மாமிமார் எல்லோரும் சிங்களத்தில்தான் கதைத்தார்கள். அவர்கள் தமிழில் கதைக்க வாய்ப்பில்லை. 

அதன் பின்னர் 13 ஆம் நூற்றாண்டில் தென்னிந்தியாவிலிருந்து தமிழ் பேசக்கூடிய முஸ்லிம்கள் இலங்கைக்கு வந்திருக்கின்றார்கள். அவர்கள் இலங்கைக்கு வந்தது போலவே மியன்மாருக்கும் தாய்லாந்துக்கும் சென்றிருக்கின்றார்கள். இவர்களுக்கும் முதலில் இலங்கைக்கு வந்த முஸ்லிம்களுக்கும் இடையே வித்தியாசம் இருந்தது.

இவ்வாறாக இந்நாட்டுக்கு முஸ்லிம்கள் பிரதானமாக இரு முறை வந்திருக்கின்றார்கள். இந்த முஸ்லிம்கள் பற்றிய வரலாறு “இலங்கை முஸ்லிம்கள்” என்ற புத்தகத்தை எழுதியுள்ள லோனா தேவராஜா என்ற வரலாற்று ஆசிரியைக்குத் தெரியாது. கருத்துக்களைத் தேடியெடுப்பதற்கும், ஆய்வு செய்வதற்கும் அவருக்குத் தெரியவில்லை.

தென்னிந்தியாவிலிருந்து இலங்கைக்கு வருகைதந்த இந்த முஸ்லிம்கள் ஆரம்பத்தில் அரேபியாவிலிருந்து இலங்கைக்கு வந்து சிங்களப் பெண்களைத் திருமணம் செய்துகொண்ட முஸ்லிம்களை விட பெரிதும் வேறுபட்டார்கள்.

இந்தியாவில் அன்றிருந்த சில செயற்பாடுகளினாலேயே 13 ஆம் நூற்றாண்டில் இலங்கைக்கு வருகை தந்த முஸ்லிம்கள் கலாச்சார செல்வாக்கினை ஏற்படுத்திக் கொண்டார்கள். இதனால் ஆரம்பத்தில் சிங்களத்தில் கதைத்து வந்த முஸ்லிம்கள் எல்லோரும் தமிழ் பேசக் கூடியவர்களாக மாறிவிட்டார்கள்.

அவர்கள் வியாபாரம் செய்து வந்தார்கள். அவர்கள் சிங்களவர்களாவதற்கோ பௌத்த மதத்தைத் தழுவுவதற்கோ எவ்வித தலையீடுகளும் இருக்கவில்லை.

சிங்கள பௌத்தர்களுக்கு எதிராக அமெரிக்கா, இங்கிலாந்து போன்ற மேற்கத்தேய நாடுகள் சூட்சுமமான முறையில் முஸ்லிம்களை சிங்களவர்களுக்கு எதிராக பயன்படுத்த முனைகின்றது. அதற்கு மேலாக இந்தப் பிரச்சினையை தற்போது முஸ்லிம்களுக்கு எதிரான சிங்கள பௌத்த ஆக்கிரமிப்பாக்க் காட்டுவதற்கு முழு மூச்சுடன் செயற்படுகின்றது. அதனைத் தவறான எண்ணக்கருத்தாகவே நான் கருதுகின்றேன்.”

இலங்கையில் 253 விகாரைகள் மூடப்பட்டுள்ளதாக ஒரு பத்திரிகையில் நான் படித்தேன். இதுபற்றி யார்தான் கதைத்தார்கள்? பாடசாலைகளை மூடினால் பேசுவார்கள்.

கிராமப்புற மக்கள் தங்கள் பிள்ளைகளை நகர்ப்புற பாடசாலைகளுக்கு அனுப்பவதனாலேயே பாடசாலைகள் மூடப்படுகின்றன. விகாரைகள் மூடப்படுவற்குரிய காரணங்கள் வேறு. 253 விகாரைகள் மூடப்பட்டிருப்பதன் அர்த்தம் என்னவென்றால், சிங்கள பௌத்தர்களிடம் இருந்த அந்த தற்பாதுகாப்பு இல்லாமல் போயுள்ளது என்பதே.

ஆனால் முஸ்லிம் பள்ளிவாயல்களும், கிறிஸ்தவ தேவாலயங்களும் புதிது புதிதாக நிர்மாணிக்கப்படுகின்றன. இந்த கிறிஸ்தவ தேவாலயங்கள் பாரம்பரிய கத்தோலிக்க, எங்க்லிக்கன் எனும் மெதோதிஸ்த தேவாலயங்கள் அல்ல. காளான்கள் முளைப்பது போல எழுகின்ற அமெரிக்க கிறிஸ்தவ தேவாலயங்கள். இவ்வாறு பள்ளிவாயல்களும், தேவாலயங்களும் உருவாகும் போது விகாரைகள் மூடப்படுமாயின் ஏதேனும் ஒரு பிரச்சினை இருக்கத்தான் செய்கின்றது. கிராமம் கிராமமாக பள்ளிகள் கட்டப்படாதவிடத்தும் கிராமங்கள் பலவற்றுக்கேனும் ஒரு பள்ளிவாசல் எழும்பத்தான் செய்கின்றது.

இப்போது பௌத்தர்கள் என்னதான் செய்கிறார்கள். பௌத்தர்களின் தற்காப்புக் கருதியே மகாநாம தேரர் மகாவம்சத்தை எழுதியிருக்கின்றார். அதற்காகவே முயற்சிசெய்திருக்கின்றார். இவ்வாறு பௌத்த விகாரைகள் மூடுவதற்கு இடமளித்தால் கடைசியாக எங்களுக்கு புகழ்மிக்க குறித்த சில விகாரைகள் மட்டுமே எஞ்சும் என்பதில் கிஞ்சித்தும் சந்தேகமில்லை. கிராமத்திலுள்ள விகாரையைப் பாதுகாப்பது தேவைப்பாடாக உள்ளது.

மியன்மார், தாய்லாந்து, லாஓஸ் போன்ற நாடுகளில் போன்ற நாடுகளில் தேரவாத பௌத்தம் நின்று நிலைப்பதற்குக் காரணம், பாதுகாக்கப்பட்டிருப்பதற்குக் காரணம் இலங்கையிலிருந்து பௌதத்தை அந்நாடுகளுக்குக் கொண்டுசென்றதனாலாகும். இலங்கையிலிருந்து மன்னர்கள் அந்நாடுகளை ஆக்கிரமித்து பௌதத்தை அங்கு பரப்பவில்லை. போர்த்துக்கேயர் இந்நாட்டில் கத்தோலிக்க மதத்தைப் பரப்பியது போல பலாத்காரமான முறையில் அந்நாடுகளில் பௌத்த மதம் பரப்பப்படவில்லை. எங்கள் தேரவாத பௌதத்தில் இருந்த மகாவம்சம் உறுதிப்படுத்திய தற்காப்பினாலேயே தேரவாதம் இன்று இலங்கையில் நிலைகொண்டிருக்கின்றது.. உலகில் தேரவாதம் நிலை கொண்டிருக்கின்றது.

நான் பொதுபல சேனா உறுப்பினன் அல்லன். என்றாலும் நான் பொதுபல சேனாவினர் அடிப்படைவாதிகள் என்பதை ஏற்றுக் கொள்வதில்லை. பௌத்தர்களுக்கு இருக்கின்ற தற்காப்புக்கேற்ப பௌதத்தைப் பாதுகாப்பதற்காக குரல் கொடுக்கின்றார்கள். அப்படிக் குரல் கொடுப்பதற்குப் பெயர் அடிப்படைவாதமோ இனவாதமோ அல்ல. எங்கள் மகாவம்சம் இல்லையென்றால் உலகில் தேரவாதமே இல்லை.

சிங்கள பௌத்த கலாச்சாரத்தை இந்நாட்டில் பாதுகாக்க முடியாது விட்டால் எங்கேதான் பாதுகாக்கப்படும் என்றுதான் கேட்க வேண்டும்.

சிங்களத்தில்  - சரத் பெரேரா
தமிழில் - கலைமகன் பைரூஸ்
நன்றி - “சிலுமின”